சென்னை, காஞ்சி, திருவள்ளூரில் 50 பள்ளிகளுக்கு குண்டு மிரட்டல்.. வதந்தியாளர்களுக்கு போலீஸ் எச்சரிக்கை
சென்னை: சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள 50க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு தொலைபேசியில் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. சென்னையில் சைதாப் பேட்டை, அடையாறு, மயிலாப்பூர் பள்ளிகளூக்கு மிரட்டல் வந்ததை அடுத்து பெரும்பாலான பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வெடிகுண்டு மிரட்டலால் கிழக்கு கடற்கரைச்சாலையில் போக்குவரத்து ஸ்தம்பித்தது.
வெடிகுண்டு மிரட்டலை அடுத்து பெற்றோர்கள் அலறி அடித்துக்கொண்டு பள்ளிக்கு சென்றனர். உடனடியாக விடுமுறை அறிவிக்கப்பட்டதை அடுத்து பள்ளிகளில் உள்ள மாணவ- மாணவிகள் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.
வாட்ஸ் அப் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் வீண் வதந்தியை பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாநகர காவல்துறை ஆணையர் டி.கே.ராஜேந்திரன் கூறியுள்ளார்.

மர்ம தொலைபேசி மிரட்டல்
சென்னை சாந்தோமில் உள்ளது ரபெய்ல்ஸ் மேல்நிலைப்பள்ளி. மாணவிகள் மட்டுமே பயிலும் இந்தப்பள்ளியின் முதல்வருக்கு காலை 11 மணியளவில் மர்ம தொலைபேசி ஒன்று வந்துள்ளது. அதில் பள்ளி வளாகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டதாக அந்த மர்ம குரல் கூறியுள்ளது. இதனையடுத்து போலீசாருக்கு உடனடியாக பள்ளி முதல்வர் தொலைபேசி மூலம் தகவல் அளித்தார்.
வெடிகுண்டு நிபுணர்கள்
வெடிகுண்டு நிபுணர்களுடன் மோப்ப நாய்களுடன் போலீசார் பள்ளி வளாகத்திற்குள் வரவே அந்த பகுதியில் பதற்றம் உருவானது. இதனையடுத்து மாணவிகளின் பெற்றோர்கள் அலறியடித்துக்கொண்டு பள்ளிக்கு விரைந்தனர். உடனடியாக பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்படவே மாணவிகள் அனைவரும் பெற்றோருடன் அனுப்பிவைக்கப்பட்டனர். பள்ளி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தென் சென்னையில் பள்ளிகள்
இதேபோல தென்சென்னை பகுதியில் உள்ள அடையாறு, திருவான்மியூர்,ஈஞ்சம்பாக்கம், மந்தைவெளி மற்றும் கேளம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் பிரபல தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதுகுறித்த தகவல் வாட்ஸ் அப்பிலும் பரவிய நிலையில், பள்ளி நிர்வாகமும் பெற்றோர்களுக்குத் தகவல் அனுப்பியது.
போலீசார் குவிப்பு
இதனையடுத்து தங்களது குழந்தைகளை பெற்றோர்கள் வந்து அழைத்துச் சென்றனர். வெடிகுண்டு மிரட்டல் தகவல் பரவியதால் பள்ளிக்குழந்தைகளும், பெற்றோர்களும் பீதியடைந்தனர். வெடிகுண்டு மிரட்டலையடுத்து அடையாறு திருவான்மியூர் பகுதிகளில் உள்ள பள்ளிகள் முன்பு போலீசார் குவிக்கப்பட்டனர்.
50 பள்ளிகளுக்கு விடுமுறை
இதேபோல இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள 50க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு தொலைபேசியில் வெடிகுண்டு மிரட்டல் வந்தது.
ஒரேநாளில் 50க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு மிரட்டல் வந்ததால் பதற்றம் ஏற்பட்டது. இதனால் பெரும்பாலான பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
வெடிகுண்டு மிரட்டலால் கிழக்கு கடற்கரைச்சாலையில் போக்குவரத்து ஸ்தம்பித்தது.
காவல்துறை விளக்கம்
இதனிடையே வெடிகுண்டு மிரட்டல் பற்றிய வாட்ஸ் அப் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று சென்னை மாநகர காவல்துறை ஆணையர் அறிவித்துள்ளார்.
சென்னையில் எந்த பள்ளிக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடப்படவில்லை என்று கூறியுள்ள காவல்துறை ஆணையர், வீண் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்றும், வீண் வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை ஆணையர் டி.கே.ராஜேந்திரன் கூறியுள்ளார்.
-
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல் -
திருச்சி ரோடு ஷோவில்.. வேனில் இருந்து எகிறி குதித்து ஓடிய விஜய்.. பதறிய பவுன்சர்கள்.. யாரந்த பெண்? -
அண்ணன் சொல்லிட்டாரு.. சட்டென களத்திற்கு வந்த பிரேமலதா.. இல்லத்தரசி கூப்பன் பற்றி செம அப்டேட்! -
ஆத்திரத்தின் உச்சியில் அண்ணாமலை..டெல்லியை ஆட்டி படைக்கும் அடிவருடிகள்! கருப்பு சிகப்பாகும் காவிகள்?












Click it and Unblock the Notifications