Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னை, காஞ்சி, திருவள்ளூரில் 50 பள்ளிகளுக்கு குண்டு மிரட்டல்.. வதந்தியாளர்களுக்கு போலீஸ் எச்சரிக்கை

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள 50க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு தொலைபேசியில் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. சென்னையில் சைதாப் பேட்டை, அடையாறு, மயிலாப்பூர் பள்ளிகளூக்கு மிரட்டல் வந்ததை அடுத்து பெரும்பாலான பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வெடிகுண்டு மிரட்டலால் கிழக்கு கடற்கரைச்சாலையில் போக்குவரத்து ஸ்தம்பித்தது.

வெடிகுண்டு மிரட்டலை அடுத்து பெற்றோர்கள் அலறி அடித்துக்கொண்டு பள்ளிக்கு சென்றனர். உடனடியாக விடுமுறை அறிவிக்கப்பட்டதை அடுத்து பள்ளிகளில் உள்ள மாணவ- மாணவிகள் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.

வாட்ஸ் அப் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் வீண் வதந்தியை பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாநகர காவல்துறை ஆணையர் டி.கே.ராஜேந்திரன் கூறியுள்ளார்.

Bomb threat triggers panic in Chennai schools

மர்ம தொலைபேசி மிரட்டல்

சென்னை சாந்தோமில் உள்ளது ரபெய்ல்ஸ் மேல்நிலைப்பள்ளி. மாணவிகள் மட்டுமே பயிலும் இந்தப்பள்ளியின் முதல்வருக்கு காலை 11 மணியளவில் மர்ம தொலைபேசி ஒன்று வந்துள்ளது. அதில் பள்ளி வளாகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டதாக அந்த மர்ம குரல் கூறியுள்ளது. இதனையடுத்து போலீசாருக்கு உடனடியாக பள்ளி முதல்வர் தொலைபேசி மூலம் தகவல் அளித்தார்.

வெடிகுண்டு நிபுணர்கள்

வெடிகுண்டு நிபுணர்களுடன் மோப்ப நாய்களுடன் போலீசார் பள்ளி வளாகத்திற்குள் வரவே அந்த பகுதியில் பதற்றம் உருவானது. இதனையடுத்து மாணவிகளின் பெற்றோர்கள் அலறியடித்துக்கொண்டு பள்ளிக்கு விரைந்தனர். உடனடியாக பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்படவே மாணவிகள் அனைவரும் பெற்றோருடன் அனுப்பிவைக்கப்பட்டனர். பள்ளி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தென் சென்னையில் பள்ளிகள்

இதேபோல தென்சென்னை பகுதியில் உள்ள அடையாறு, திருவான்மியூர்,ஈஞ்சம்பாக்கம், மந்தைவெளி மற்றும் கேளம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் பிரபல தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதுகுறித்த தகவல் வாட்ஸ் அப்பிலும் பரவிய நிலையில், பள்ளி நிர்வாகமும் பெற்றோர்களுக்குத் தகவல் அனுப்பியது.

போலீசார் குவிப்பு

இதனையடுத்து தங்களது குழந்தைகளை பெற்றோர்கள் வந்து அழைத்துச் சென்றனர். வெடிகுண்டு மிரட்டல் தகவல் பரவியதால் பள்ளிக்குழந்தைகளும், பெற்றோர்களும் பீதியடைந்தனர். வெடிகுண்டு மிரட்டலையடுத்து அடையாறு திருவான்மியூர் பகுதிகளில் உள்ள பள்ளிகள் முன்பு போலீசார் குவிக்கப்பட்டனர்.

50 பள்ளிகளுக்கு விடுமுறை

இதேபோல இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள 50க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு தொலைபேசியில் வெடிகுண்டு மிரட்டல் வந்தது.
ஒரேநாளில் 50க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு மிரட்டல் வந்ததால் பதற்றம் ஏற்பட்டது. இதனால் பெரும்பாலான பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
வெடிகுண்டு மிரட்டலால் கிழக்கு கடற்கரைச்சாலையில் போக்குவரத்து ஸ்தம்பித்தது.

காவல்துறை விளக்கம்

இதனிடையே வெடிகுண்டு மிரட்டல் பற்றிய வாட்ஸ் அப் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று சென்னை மாநகர காவல்துறை ஆணையர் அறிவித்துள்ளார்.
சென்னையில் எந்த பள்ளிக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடப்படவில்லை என்று கூறியுள்ள காவல்துறை ஆணையர், வீண் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்றும், வீண் வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை ஆணையர் டி.கே.ராஜேந்திரன் கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+