மேலாண்மை பற்றிய புத்தகம்.. சென்னையில் ஜன. 29ல் வெளியீடு.. லாபம் முழுக்க ஆம்புலன்ஸ் சேவைக்கு
சென்னை: கமலேஷ் சுப்பிரமணியன் எழுதிய மேலாண்மை குறித்த புதிய புத்தகம் வரும் 29ம் தேதி சென்னையில் வெளியிடப்படுகிறது.
இதுகுறித்து எமரால்ட் பப்ளிஷர்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: கமலேஷ் சுப்பிரமணியன் எழுதி, ஐ.ஏ.எஸ் அதிகாரி இறையன்பு முன்னுரை எழுதியுள்ள 'feather in a C.A.P' என்ற புத்தகம் ஜனவரி 29ம் தேதி வெளியிடப்படுகிறது. இந்த புத்தகம், மேலாண்மையுடன் கதைகளும் கொண்டது.

தமிழ்நாடு பப்ளிஷர் சங்க பொருளாளர் ஒளிவண்ணன், பிஎன்ஐ செயல் இயக்குநர் சுனில் சேதியா மற்றும் நேட்சுரல்ஸ், குமரவேல் ஆகியோர் புத்தகத்தை வெளியிடுகிறார்கள்.
எழுத்தாளருக்கு கிடைக்கும் லாபம் முழுக்க, புனித ஜான்ஸ் அம்புலன்ஸ் சேவைக்கு வழங்கப்படும். சென்னை மவுண்ட் ரோட்டிலுள்ள உமாபதி ஹாலில் புத்தக வெளியீடு நிகழ்ச்சி மாலை 4 மணியளவில் ஆரம்பமாகும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications