எடப்பாடியில் ஒரு அதிசயப் பிறவி.. பெண்களின் உள்ளாடைகளை மட்டும் திருடிய டிரைவர் கைது!
எடப்பாடி: சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே 37 வயது லாரி டிரைவர் ஒருவர் பெண்களின் உள்ளாடைகளை மட்டும் குறி வைத்து கடந்த 2 வருடங்களாக திருடி வந்துள்ளார். அந்த நபரை தற்போதும் கையும் களவுமாக போலீஸார் கைது செய்துள்ளனர்.
கன்னிவாய்க்கால் என்ற பகுதியைச் சேர்ந்தவர் இந்த லாரி டிரைவர். பெயர் சசிக்குமார். திருமணமாகி, 2 குழந்தைகளும் உள்ளனர். இவருக்கு வித்தியாசாமான பழக்கம் 2 ஆண்டுகளுக்கு முன்பு தொற்றிக் கொண்டது. அதாவது அக்கம் பக்கத்து வீடுகளின் மாடியில், கொள்ளைப் புறத்தில், வீட்டுக்கு வெளியே பெண்கள் காயப்போடும் அவர்களது உள்ளாடைகளை மட்டும் இவர் திருடி வந்துள்ளார்.
வீடுகளில் தாங்கள் காயப் போடும் பிரா, நைட்டி, பேன்டீஸ் ஆகியவை காணாமல் போனதால் பெண்களுக்குப் பெரும் குழப்பமானது. அக்கம் பக்கத்துப் பெண்களிடையே இது பெரும் பீதியைக் கிளப்பியது. யாரோதான் இதை குறி வைத்துத் திருடுவதாக அவர்களுக்குத் தோன்றியது.
இதையடுத்து தத்தமது வீ்ட்டு ஆண்களிடம் இதுகுறித்து அவர்கள் கூறினர். இதனால் கொந்தளித்த ஆண்கள், அந்த நூதனத் திருடனைப் பிடிக்க ரகசியமாக கண்காணிக்க ஆரம்பித்தனர். அத்தனை வீடுகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது. அப்போது தியாகராஜன் என்பவரது வீட்டு வெளிக் கொடியில் காயப்போட்டிருந்த உள்ளாடையை சசிக்குமார் திருடியபோது, அதை தியாகராஜன் பார்த்து விட்டார்.
உடனடியாக அவரை மடக்கிப் பிடித்தார். அக்கம்பக்கத்தினர் குவிந்தனர். சசிக்குமாரிடம் விசாரித்தபோதுதான் அவர் தான் திருடியதை ஒத்துக் கொண்டார். இதையடுத்து போலீஸில் அவர் ஒப்படைக்கப்பட்டார். போலீஸார் அவரைக் கைது செய்தனர்.
பூலாம்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications