For Quick Alerts
For Daily Alerts
Just In
சூரிய மின்சக்தி திட்டத்திற்கு அனுமதி பெற லஞ்சம்… முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் மீது வழக்கு
சூரிய மின்சக்தி திட்டத்திற்கு அனுமதி பெற லஞ்சம் பெறப்பட்டதாக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் மீது வழக்கு தொடர திருச்சி கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
திருச்சி: முன்னாள் மின்சாரத் துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் மீது, வழக்கு தொடர திருச்சி கோர்ட் போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளது.
சூரிய மின்சக்தி திட்டத்துக்கு அனுமதி தர ரூ.50 லட்சம் லஞ்சம் வாங்கியதாக, லோகநாதன் என்பவர் புகார் செய்திருந்தார். இவரது புகாரை ஏற்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று திருச்சி கோர்ட் போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கில் காமராஜ், அருண்குமார், பாஸ்கர் ஆகியோர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரிக்க திருச்சி போலீசாருக்கு கோர்ட் உத்தரவிடப்பட்டுள்ளது.
முன்னாள் மின்சாரத் துறை அமைச்சர் விஸ்வநாதன் மீது வழக்கு தொடர்ந்து விசாரிக்க வேண்டும் என்று திருச்சி கோர்ட் உத்தரவிட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Comments
English summary
Trichy court ordered the police department that bribery case will file against Ex-Minister Natham Viswanathan.
Story first published: Thursday, May 25, 2017, 12:17 [IST]