ராமேஸ்வரம் கோவில் மதில் சுவரை மறைக்கும் கட்டிடங்கள்... இடிக்க வலியுறுத்தும் சிஆர்பிஎப்
ராமேஸ்வரம்: பாதுகாப்பு கருதி ராமேசுவரம் கோவிலின் 4 ரத வீதிகளின் கோவிலின் மதில் சுவர்களையும் மறைத்துள்ள கோவிலுக்கு சொந்தமான கட்டிடங்கள் உள்ளிட்ட அனைத்து கட்டிடங்களையும் விரைவில் இடிக்க வேண்டும் என மத்திய பாதுகாப்பு படையினர் வலியுறுத்தியுள்ளனர்.
தமிழகத்தில் உள்ள புண்ணிய தலங்களில் ஒன்றாக விளங்குகிறது ராமேஸ்வரம். இங்குள்ள ராமநாதசாமி கோவிலுக்கு தீவிரவாதிகளால் அச்சுறுத்தல் இருந்து வருவதால், கடந்த 4 ஆண்டுகளாக அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தீவிர சோதனைகளுக்குப் பின்னரே பக்தர்கள் கோவில் உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.

இந்நிலையில், ராமேஸ்வரம் கோவில் பாதுகாப்பு பணிகளை நேரில் பார்வையிட, மத்திய அரசின் மத்திய பாதுகாப்பு படையின் துணை ஆணையர் தலைமையில் 4 பேர் கொண்ட குழு கட்ந்தமாதம் அங்கு சென்றனர்.
கடந்த மாதம் 28ம் தேதி முதல் 30ம் தேதி வரை 3 நாட்கள் அக்குழு கோவிலில் முகாமிட்டு பாதுகாப்பு பணிகளை ஆய்வு செய்தனர்.
அப்போது, கோவிலின் உள்பகுதியில் 28 இடங்களில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களின் செயல்பாடுகள், கோவிலின் மதில் சுவர்களை மறைத்து கட்டப்பட்டு இருந்த கோவிலுக்கு சொந்தமான பக்தர்கள் தங்கும் விடுதி, தனியார் தங்கும் விடுதிகள், வீடுகள் என அனைத்து கட்டிடங்களையும் அவர்கள் பார்வையிட்டனர்.
அதனைத் தொடர்ந்து, கோவில் மதில் சுவர்களை மறைத்து கட்டிடங்கள் கட்டப்பட்டிருப்பதால் கோவிலின் மேல் தளம் வழியாக தீவிரவாதிகள் கோவிலின் உள்ளே சென்று விடும் ஆபத்து இருப்பதை அவர்கள் கண்டறிந்தனர். இதனால், கோவிலின் 4 ரத வீதிகளிலும் மதில் சுவர்களை மறைத்து கட்டப்பட்டுள்ள கட்டிடத்தை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவில் அதிகாரிகளிடம் அக்குழு வலியுறுத்தியது.
மேலும், கோவில் பணியாளர்களும், யாத்திரை பணியாளர்களும் அடையாள அட்டை அணிவதை கட்டாயமாக்க வேண்டும் என்றும் திட்டவட்டமாக அவர்கள் தெரிவித்தனர்.
அதுமட்டுமின்றி அவசர காலத்தில் பாதுகாப்பு படை ஹெலிகாப்டரில் வந்து இறங்கும் வகையில் ராமேசுவரத்தில் ஹெலிகாப்டர் இறங்கு தளம் உள்ளதா? எனவும் பாதுகாப்பு படையினர் கோவில் அதிகாரிகளின் விசாரித்தனர். ஆனால் ராமேசுவரத்தில் ஹெலிகாப்டர் தளங்கள் எதுவும் கிடையாது. மண்டபம் முகாம், உச்சிப்புளியில் உள்ள இந்திய கடற்படை தளத்தில் ஹெலிகாப்டர் இறங்கு தளம் உள்ளது என அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது.
மத்திய அரசின் பாதுகாப்புப் படைக் குழுவினரின் இந்த 3 நாள் ஆய்வு மூலம் விரைவில் ராமேசுவரம் கோவிலில் மத்திய பாதுகாப்பு படையோ அல்லது மத்திய கமாண்டோ படையோ பாதுகாப்பில் ஈடுபடுத்தப்படலாம் எனத் தெரிகிறது.
மேலும், கோவிலின் 4 ரத வீதிகளின் கோவிலின் மதில் சுவர்களையும் மறைத்துள்ள கோவிலுக்கு சொந்தமான கட்டிடங்கள் உள்ளிட்ட அனைத்து கட்டிடங்களையும் விரைவில் இடிக்குமாறு மத்திய அரசு மூலம் தமிழக அரசுக்கு தெரிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
இந்த ஆய்வு தொடர்பாக ராமேஸ்வரம் கோவில் இணை ஆணையர் செல்வராஜ் கூறுகையில், "ராமேஸ்வரம் கோவிலின் பாதுகாப்பை ஆய்வு செய்த மத்திய பாதுகாப்பு படையினர் கோவிலின் மதில் சுவர்களை மறைத்துள்ள அனைத்து கட்டிடங்களையும் அகற்ற வேண்டும் என வலியுறுத்தினார்கள். ஆனால் கோவிலின் ரத வீதிகளில் பட்டா நிலத்தில் வசிப்பவர்களை அகற்றுவது குறித்து மாவட்ட நிர்வாகம் தான் முடிவு செய்து நடவடிக்கை எடுக்க முடியும்.
தனியார் கட்டிடங்களை அகற்றுவது குறித்து கோவில் நிர்வாகம் எதுவும் முடிவு செய்ய முடியாது. ஆனால் கோவிலின் மதில் சுவரை மறைத்து கட்டப்பட்டுள்ள கோவிலுக்கு சொந்தமான அனைத்து கட்டிடங்களும் அரசு அனுமதி கிடைத்த பின்பு இடிக்கப்படும்' என்றார்.
-
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி! -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
தவெக 6-12 தொகுதிகள் ஜெயிக்க வாய்ப்பு.. விஜய் வருகையால் அதிமுகவுக்கு பூஸ்ட்? கருத்துக்கணிப்பு ரிசல்ட் -
ஜோதிடரிடம் இருந்து வந்த மெசேஜ்.. வியூகத்தை மாற்றும் எடப்பாடி பழனிசாமி -
கிங் மேக்கர்? செக் வைத்த ’விஜய்’.. திணறும் அறிவாலயம்! - மட்ரைஸ் சர்வே சொல்லும் ‘திடுக்’ ரிப்போர்ட்! -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான் -
தயாநிதி மாறன் கணித்த திமுகவின் 200+ ஸ்வைப்.. அப்ப வாஷ் அவுட் ஆகிவிடுமா எடப்பாடி பழனிசாமியின் அதிமுக? -
PMK Ramadoss: பாமக ராமதாஸை தைலாபுரத்தில் சந்தித்தாரா செங்கோட்டையன்? நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications