நின்றுகொண்டிருந்த லாரி மீது மோதிய பேருந்து- 5 பேர் பரிதாப பலி
மதுரை: மதுரையில் அரசு பேருந்து விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் இருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு இன்று மதியம் ஒரு அரசு பேருந்து திருச்சி நோக்கி புறப்பட்டது. பேருந்து மேலூரை அடுத்துள்ள கருங்காலக்குடி - வஞ்சிநகரம் இடையே உள்ள 4 வழிச்சாலையில் சென்று கொண்டிருந்தது.

அப்போது ரோட்டோரத்தில் நின்றிருந்த லாரி மீது அரசு பேருந்து பயங்கரமாக மோதியது. இதில் பஸ்சின் முன்பகுதி அப்பளம்போல் நொறுங்கியது. மோதிய வேகத்தில் லாரியும், அதன்முன்பு நின்றிருந்த மற்றொரு லாரியும் சேதமானது.
இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த பெண் உள்பட 5 பேர் உடல் நசுங்கி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். 20 க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்தனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்த கொட்டாம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயமடைந்தவர்களை மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications