பஸ்கள் ஓடவில்லை... ரயிலைப் பிடிக்க ஓடும் சென்னை மக்கள்- ஸ்டேஷன் தெரியாமல் திணறல்!
சென்னை : அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்களின் போராட்டம் காரணமாக சென்னையில் மிகக் குறைந்த அளவிலேயே பேருந்துகள் ஓடுகிறது. இதனால், அலுவலகம் மற்றும் பள்ளி, கல்லூரிக்குச் செல்வோர் பேருந்துக்கு மாற்றாக ரயிலில் பயணம் செய்து வருகின்றனர்.
இன்று தொடங்கவேண்டிய போக்குவரத்து ஊழியர்களின் போராட்டம் முன்கூட்டி நேற்றே தொடங்கியது. நேற்று விடுமுறை நாள் என்பதால் வெளியில் செல்ல முடியாமல் மக்கள் பெரும் திண்டாட்டத்திற்கு ஆளானார்கள். கட்சித் தலைவர்கள் இப்பிரச்சினைக்கு விரைந்து தீர்வு காண அரசிற்கு கோரிக்கை விடுத்தனர். ஆனால், போராட்டம் தொடரும் என போக்குவரத்து கழகங்கள் அறிவித்தன.

எனவே, இன்றும் பேருந்துகள் அதிகளவில் ஓடாது என முடிவெடுத்த மக்கள் தங்கள் பயணத்திற்கு ரயிலைத் தேர்ந்தெடுத்தனர். அதன்படி, அலுவலகம், பள்ளி மற்றும் கல்லூரி செல்பவர்களுக்காக கூட்டம் வழக்கத்தை விட ரயில் நிலையங்களில் இன்று அதிக அளவில் காணப்பட்டது.
பேருந்துகள் ஓடாததை சாதகமாகப் பயன் படுத்தி ஆட்டோ ஓட்டுநர்கள் அதிகளவில் கட்டணம் வசூலிப்பதால் ரயில் பயணத்தை தேர்ந்தெடுத்தனர் மக்கள். ஆனபோதும், ஆட்டோக்களுக்கும் கடும் கிராக்கி இருந்தது. இதேபோல், மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட சொந்த வாகனங்களில் செல்வோரின் எண்ணிக்கையும் சாலையில் அதிகரித்துள்ளது.
பொதுவாகவே, சென்னையில் மின்சார ரயில் சேவையைப் பயன்படுத்துவோர் அதிகம். ஆனால், இன்று வழக்கத்திற்கு மாறாக காலை 5.30 மணி முதலே மின்சார ரயில்களில் கூட்டம் அலைமோதியது.
ரயில் டிக்கெட் எடுப்பதற்காக நீண்ட கியூ வரிசை காணப்பட்டது. முதன்முறையாக அலுவலகம் உள்ளிட்ட விசயங்களுக்காக ரயிலில் செல்பவர்கள் சரியான ரயில் நிலையங்களில் இறங்குவதற்கு திணறும் நிலையும் ஏற்பட்டது.
இதேபோல், வெளியூர் செல்பவர்களும் ரயில் பயணத்தையே தேர்ந்தெடுப்பதால் தட்கல் டிக்கெட் விற்பனை அதிகரித்துள்ளதாக ரயில்வே வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications