ஒருபக்கம் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை.. மறுபக்கம் சி.ஆர்.சரஸ்வதி, பாத்திமாபாபு செல்பி.. தொண்டர்கள் ஷாக்
சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பெற்றுவரும் அப்போலோ மருத்துவமனை எதிரே அமர்ந்து கொண்டு செல்போனில் செல்ஃபி எடுத்துள்ளனர், அதிமுக நிர்வாகிகளான சி.ஆர்.சரஸ்வதியும், பாத்திமாபாபுவும்.
நடிகைகளான சி.ஆர்.சரஸ்வதி, அ.தி.மு.கவின் செய்தித்தொடர்பாளராகவும், பாத்திமாபாபு, தலைமை பேச்சாளராகவும் உள்ளனர். இவர்கள் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து நலம் விசாரிக்க சென்றனர்.

இதன்பிறகு மருத்துவமனை வெளியே வந்து அமர்ந்து கொண்டு, செல்ஃபி எடுத்துள்ளனர். பாத்திமா பாபு செல்போனில் செல்ஃபி எடுக்கப்பட்டதை போல தெரிகிறது. சரஸ்வதி அதற்கு போஸ் கொடுத்துள்ளார். இந்த போட்டோ வார இதழ் ஒன்றின் போட்டோ கிராபரால் கிளிக் செய்யப்பட்டுவிட்டது.
அதிமுக தொண்டர்கள் எல்லோரும், ஜெயலலிதா குணமாக வேண்டி, கோயில், கோயிலாக வலம்வந்து வேண்டிவரும் நிலையில், இவ்விரு முக்கிய நிர்வாகிகள் ஜாலியாக செல்பி எடுத்துள்ளது தொண்டர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
ஜெயலலிதா இதை கண்டுகொள்ளாமல் விடுவாரா, அல்லது, சீரியஸ்னஸ் இல்லாமல் செல்ஃபி எடுத்ததற்காக பதவியை பறிப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.












Click it and Unblock the Notifications