For Daily Alerts
Just In
மின் கம்பி அறுந்து விழுந்து தாம்பரம்-கடற்கரை ரயில் சேவை பாதிப்பு!
சென்னை: சென்னை பல்லாவரம் ரயில் நிலையம் அருகே, உயர் அழுத்த மின் கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதனால் தாம்பரம் சென்னை கடற்கரை வரையிலான மின்சார ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
பல்லாவரம் அருகே உயர் அழுத்த மின் கம்பி அறுந்து விழுந்ததால் தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரை வரை செல்லும் ரயில்களின் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விரைவு ரயில்கள் செல்லும் பாதையில் மின்சார ரயில்கள் திருப்பி விடப்பட்டுள்ளன.
விரைவு ரயில்கள் செல்லும் பாதையில் மின்சார ரயில்கள் திருப்பி விடப்பட்டுள்ளதால், தென் மாவட்டங்களில் இருந்து சென்னை எழும்பூருக்கு வரும் ரயில்கள் காலதாமதமாக வருவதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, சென்னை கடற்கரை-பூங்கா நகர் இடையே மின் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டிருந்த மின்சார ரயில்கள் சேவை தற்போது சீரடைந்துள்ளது.
English summary
The sudden disruption of suburban train services between Tambaram and Beach station due to an overhead cable fault near Pallavaram station on Monday morning left commuters, including a large number of women and children, stranded at various stations for hours.
Story first published: Monday, May 5, 2014, 11:33 [IST]