"அம்மா" என்று அலறிக் கொண்டே பச்சைக் குத்திக் கொண்ட தொண்டர்கள்- ஜெ. பிறந்தநாளுக்காக!
சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தாளை அமைச்சர்கள் முன்னிலையில் 668 தொண்டர்கள் முதல்வர் ஜெயலலிதா உருவத்தை கைகளிலும், நெஞ்சிலும் பச்சை குத்திக் கொண்டனர்.
முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை அதிமுகவினர் இன்று கொண்டாடினர். வழக்கம் போல அமர்க்களத்துடன், விதம் விதமான நிகழ்ச்சிகளுடன் பிறந்த நாள் கொண்டாட்டம் களை கட்டியிருந்தது.
இந்த நிலையில் 668 பேருக்கு ஜெயலலிதா உருவத்தை கையில் பச்சை குத்தும் நிகழ்ச்சி சென்னை வேளச்சேரியில் முருகன் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
பச்சைத் தமிழகம்! pic.twitter.com/Paoe82zRID
— raj_tuty (@i_rajtuty) February 23, 2016
வேளச்சேரி திருமண மண்டபத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில், "அம்மா...." என்ற அலறல் சத்தத்துடன் தொண்டர்கள் கையில் ஜெயலலிதாவின் உருவம் பச்சைக் குத்தப்படது.
முதல்வரின் மனதை குளிர வைக்க வேண்டுமென்பதில் அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள், எம்.எல்.ஏக்களுக்குள் பெரும் போட்டியே நடந்து கொண்டிருக்கிறது. அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், வளர்மதி, வைத்திலிங்கம், எடப்பாடி பழனிச்சாமி, பழனியப்பன் ஆகிய தமிழக அமைச்சர்களின் மேற்பார்வையில் இந்நிகழ்ச்சி நடை பெற்றது.












Click it and Unblock the Notifications