”தேர்தல் முடியும் வரை வாகன சோதனைகளை நிறுத்த முடியாது” பிரவீன் குமார் திட்டவட்டம்
சென்னை: வாகன சோதனைகளை தளர்த்த முடியாது என தமிழக தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் திட்டவட்டமாக கூறியுள்ளார்.
பாராளுமன்ற தேர்தலையொட்டி வாகனசோதனைகளை தளர்த்த முடியாது என்றும், அரசு ஸ்மால் பஸ்களில் உள்ள இலை படத்தை மறைக்க போக்குவரத்து துறைக்கு கடிதம் கொடுக்கப்பட்டு இருப்பதாகவும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி கூறினார்.

அ.தி.மு.க.வின் தேர்தல் சின்னமான இரட்டை இலை சின்னத்தை அரசு ஸ்மால்பஸ்களில் வரைந்து வைத்துள்ளதாகவும் அதை அப்புறப்படுத்த வேண்டும் என்று ஐகோர்ட்டில் தி.மு.க.பொருளாளர் மு.க.ஸ்டாலின் வழக்கு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கில் பதிலளித்த தேர்தல் கமிஷன் சிறிய பஸ்களில் உள்ள இலைப் படங்களை மறைப்பதற்கு முடிவெடுத்துள்ளதாக ஐகோர்ட்டில் கூறியுள்ளது. இது குறித்து தமிழக தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் கூறியபோது,"'சிறிய பஸ்களில் உள்ள இலைப்படங்களை மறைப்பதற்கு போக்குவரத்துத்துறை செயலாளருக்கு கடிதம் எழுதி இருக்கிறேன். இது சம்பந்தமாக கோர்ட்டில் மனுவும் தாக்கல் செய்துள்ளோம். தேர்தலுக்காக பறக்கும் படையினர் நடத்தும் சோதனையின்போது, ஆதாரம் இல்லை என்றால் வியாபாரிகளிடம் இருந்து பணத்தை கைப்பற்ற வேண்டியதுள்ளது.
ஆனால் அந்தத் தொகையை உடனே அரசுக் கருவூலத்துக்கு கொடுத்துவிடுவதில்லை. இரண்டு அல்லது மூன்று நாட்களாக அந்தத் தொகையை எங்களுடன் வைத்திருப்போம். உரிய ஆவணங்களை உதவித் தேர்தல் அதிகாரியிடம் காட்டி பணத்தை பெற்றுக்கொள்ளலாம். எனவே வாகன சோதனைகளை தளர்த்த முடியாது" என்றார்.












Click it and Unblock the Notifications