லால்குடி அருகே கூட்டுறவு சங்க தேர்தல் அலுவலர் வராததால் நாயிடம் மனு கொடுத்த வேட்பாளர்கள்
கூட்டுறவு சங்க தேர்தல் வேட்புமனுவை பெற அலுவலர் வராததால் நூதன போராட்டம் நடைபெற்றது.
Subscribe to Oneindia Tamil
திருச்சி: லால்குடி அருகே கூட்டுறவு சங்க தேர்தல் வேட்புமனுவைப் பெற அலுவலர் வராததால் நாயிடம் மனு கொடுக்கும் நூதன போராட்டம் நடைபெற்றது.
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே, வாளாடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் வேட்புமனு தாக்கல் செய்வதற்காக இன்று பலரும் திருண்டிருந்தனர். நீண்ட நேரம் காத்திருந்தும், தேர்தல் நடத்தும் அலுவலர் வரவில்லை என கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த வேட்பாளர்கள், நாயை அழைத்து வந்து நாற்காலியில் அமர வைத்து அதன் வாயில் மனுக்களை வைத்து நூதன முறையில் போராடினர்.
இதனை தொடர்ந்து, திருச்சி - லால்குடி சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications