மவுலிவாக்கம் கட்டட விபத்து– உயிரிழந்தவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி மதுரையில் அஞ்சலி
Subscribe to Oneindia Tamil
மதுரை: சென்னையில் நிகழ்ந்த கட்டட விபத்தில் உயிரிழந்தவர்களுக்காக மதுரையில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.
சென்னையில் போரூரை அடுத்த மவுலிவாக்கத்தில் 11 மாடிக் கட்டடம் சரிந்து விழுந்ததில் இதுவரை 27 பேர் மேல் உயிரிழந்துள்ளனர். மேலும், பலர் மருத்துவமனைகளில் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடி வருகின்றனர்.

இந்நிலையில் சென்னை விபத்தில் பலியானவர்களுக்கு, தமிழக கட்டட தொழிலாளர்கள் மத்திய சங்கம் சார்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி மதுரை சர்வேயர் காலனியில் உள்ள காவல் அலுவலகம் எதிரே இன்று நடைபெற்றது.
அஞ்சலி கூட்டத்தில் கட்டட தொழிலாளர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து கொண்டு கலந்து கொண்டனர். தொடர்ந்து விபத்தில் பலியானவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும், கட்டிட பாதுகாப்பு குறித்த ஆலோசனைகளும் பரிசீலிக்கப்பட்டன.












Click it and Unblock the Notifications