கரூரில் சாலை தடுப்புச்சுவரில் மோதி கார் விபத்து: 4 பேர் பலி
கரூர்: கரூரில் சாலை தடுப்புச் சுவர் மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிர் இழந்த சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் அருகே காக்கவாசி என்ற இடத்தில் சாலையில் அமைந்துள்ள தடுப்புச் சுவர் மீது கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று மோதியது. அதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 5 பேர் படுகாயமடைந்தனர். தேவி என்ற பெண்மணி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

பெங்களூருவைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் தூத்துக்குடியில் ஒரு திருமணத்திற்காக காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, கரூர்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தடுப்புச் சுவரின் மேல் வேகமாக மோதியது.

அதில், சரஸ்வதி, செல்வக்குமார், சொர்ணராஜ் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். தேவி என்ற பெண் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் பலி எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இச்சம்பவம் குறித்து வெள்ளியணை போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications