கன்னியாகுமரி: செக்ஸ் வீடியோ காட்டி மாணவி பலாத்காரம்- கார் டிரைவர் கைது
கன்னியாகுமரி: செக்ஸ் வீடியோ காட்டி மாணவி பலாத்காரம்- கார் டிரைவர் கைது
சென்னை: மார்த்தாண்டம் அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொடர்பான படங்கள், வீடியோவை காண்பித்து பலாத்காரம் செய்த கார் டிரைவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே வண்டி பிலாங்கால விளை பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார்,32. கார் டிரைவர். திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். அதே பகுதியை சேர்ந்த ஒரு பள்ளியில் 8வது வகுப்பு படித்து வரும் மாணவி கீதாவை, பள்ளி முடிந்த தும் அடிக்கடி மாணவியை யாருக்கும் தெரியாமல், கார் மற்றும் பைக்குகளில் அழைத்து வருவார் விஜயகுமார்.
தினசரி மாணவியின் வீட்டின் அருகில் கொண்டு வந்து விஜயகுமார், அப்போது தனிமையை பயன்படுத்தி மாணவி கீதாவிடம் செக்ஸ் சில்மிஷத்தில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. வீட்டில் ஆள் இல்லாத நேரத்தில் கீதாவை அழைத்து சென்று, கம்ப்யூட்டர் மற்றும் செல்போனில் ஆபாச படங்களைகாண்பித்து உணர்ச்சியை தூண்டி பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
இருவருக்கும் இடையே வயது வித்தியாசமும் அதிகமாக இருந்ததால் பார்ப்பவர்கள் ஒரு பொருட்டாக எடுதுக் கொள்ளவில்லை. ஆனால் நாளடைவில் விஜயகுமாரின் நடவடிக்கையில் மாற்றங்கள் ஏற்பட்டன. தொடர்ந்து அந்த பகுதியை சேர்ந்தவர்கள் இருவரையும் கண்காணிக்க தொடங்கினர்.
அப்போது மாணவியை வீட்டுக்கு அழைத்து சென்று விஜயகுமார் பலாத்காரம் செய்வதை உறுதி கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து மார்த்தாண்டம் மகளிர் காவல் நிலைத்தில் பொது மக்கள் புகார்அளித்தனர். விஜயகுமார், கீதா இருவரையும் கையும் களவுமாக பிடித்து போலிசார் விசாரித்தனர். அப்போது விஜயகுமார் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக மாணவி கீதா ஒப்புதல் அளித்தார். இதனைத் தொடர்ந்து குழந்தைகள் பாலியல் வன்கொடுமை தடுப்புசட்டத்தின் கீழ் விஜயகுமாரை போலீசார் கைது செய்தனர். மருத்துவ பரிசோதனைக்காக கீதாவை ஆசாரி பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.