தமிழகம் முழுவதும் மழையுடன் வாக்குப் பதிவு... சென்னையில் சாரல்; நெல்லையில் பலத்த மழை எச்சரிக்கை

Subscribe to Oneindia Tamil

சென்னை: சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தற்போது நடைபெற்று வரும் நிலையில் மதுரை, திருச்சி, தஞ்சை, திருவையாறு, விருதுநகர், திண்டுக்கல், நாகை, பெரம்பலுார், அரியலுார், கரூர், ராமநாதபுரம் உள்ளிட்ட பெரும்பாலான இடங்களில் விடிய, விடிய மழை பெய்து வருகிறது. சென்னையில் நள்ளிரவு நேரத்தில் சாரல் மழை பெய்த நிலையில் திருநெல்வேலியில் 200 மில்லி மீட்டர் அளவுக்கு, பலத்த மழை பெய்யக்கூடும் என, எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இலங்கை மற்றும் தமிழகத்தை ஒட்டிய கடற்பரப்பில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை ஏற்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வெப்பச் சலனம் காரணமாக, தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் இயக்குநர் பாலச்சந்திரன் அறிவித்துள்ளார். குறிப்பாக, தென்மாவட்டங்களில் பலத்த மழையை எதிர்பார்க்கலாம் என்றும் கூறப்பட்ட நிலையில் நேற்று மாலை முதல் தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.

 Carry umbrella with you, a rainy polling day beckons

சென்னையில் நள்ளிரவு 2 மணிக்கு லேசாக சாரல் மழை பெய்தது. மதுரை, திருச்சி, தஞ்சை, திருவையாறு, விருதுநகர், திண்டுக்கல், நாகை, பெரம்பலுார், அரியலுார், கரூர், ராமநாதபுரம் உள்ளிட்ட தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் விடிய, விடிய மழை பெய்து வருகிறது.

இந்நிலையில், திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், திருநெல்வேலியில் மட்டும் இன்று நெல்லையில் 200 மில்லி மீட்டர் அளவிற்கு மழை பெய்யக்கூடும் என கூறப்பட்டுள்ளது.

தற்போது நடைபெறும் சட்டசபை தேர்தல் வாக்குப் பதிவு தொடங்கி உள்ள நிலையில் மழை பெய்து வருகிறது. இதனால் வாக்குப் பதிவு சதவீதம் குற்றையுமோ என்ற அச்சமும் உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+