காவிரிக்காக தொடரும் போராட்டம் - தஞ்சையில் எல்ஐசி அலுவலகத்திற்கு பூட்டு - 50 பேர் கைது
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து எல்ஐசி அலுவலகத்திற்கு பூட்டு போட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
தஞ்சாவூர்: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து காவிரி உரிமை மீட்பு குழுவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தஞ்சை - புதுக்கோட்டை சாலையில் உள்ள எல்ஐசி அலுவலகத்திற்கு பூட்டு போட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. 8வது நாளாக இன்றும் போராட்டங்கள் நீடிக்கின்றன. தஞ்சாவூரில், காவிரி உரிமை மீட்டு குழுவை சேர்ந்த விவசாயிகள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தண்டவாளத்தில் அமர்ந்து திருச்சியிலிருந்து சென்னை சென்ற சோழன் விரைவு ரயிலை மறித்தனர். மற்றொரு தண்டவாளத்தில் அமர்ந்து பயணிகள் ரயில்களையும் மறித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் ரயில் சேவை சில மணி நேரம் பாதிக்கப்பட்டது.
சிதம்பரத்தில் காரைக்கால் - பெங்களூரு ரயிலை மறித்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி முழக்கம் எழுப்பினர். ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்ட 33 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருச்சியில் இந்தி பிரச்சார சபையை முற்றுகையிட்டு மக்கள் அதிகாரம் அமைப்பினர் போராட்டம் நடத்தினர். முற்றுகையை தடுக்க போலீசார் முயற்சி மேற்கொண்டனர். மேலும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.
தஞ்சை - புதுக்கோட்டை சாலையில் உள்ள எல்ஐசி அலுவலகத்திற்கு பூட்டு போட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்ட காவிரி உரிமை மீட்புக்குழுவினர் கைது செய்யப்பட்டனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications