காவிரிக்காக தொடரும் போராட்டம் - தஞ்சையில் எல்ஐசி அலுவலகத்திற்கு பூட்டு - 50 பேர் கைது
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து எல்ஐசி அலுவலகத்திற்கு பூட்டு போட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
தஞ்சாவூர்: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து காவிரி உரிமை மீட்பு குழுவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தஞ்சை - புதுக்கோட்டை சாலையில் உள்ள எல்ஐசி அலுவலகத்திற்கு பூட்டு போட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. 8வது நாளாக இன்றும் போராட்டங்கள் நீடிக்கின்றன. தஞ்சாவூரில், காவிரி உரிமை மீட்டு குழுவை சேர்ந்த விவசாயிகள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தண்டவாளத்தில் அமர்ந்து திருச்சியிலிருந்து சென்னை சென்ற சோழன் விரைவு ரயிலை மறித்தனர். மற்றொரு தண்டவாளத்தில் அமர்ந்து பயணிகள் ரயில்களையும் மறித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் ரயில் சேவை சில மணி நேரம் பாதிக்கப்பட்டது.
சிதம்பரத்தில் காரைக்கால் - பெங்களூரு ரயிலை மறித்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி முழக்கம் எழுப்பினர். ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்ட 33 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருச்சியில் இந்தி பிரச்சார சபையை முற்றுகையிட்டு மக்கள் அதிகாரம் அமைப்பினர் போராட்டம் நடத்தினர். முற்றுகையை தடுக்க போலீசார் முயற்சி மேற்கொண்டனர். மேலும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.
தஞ்சை - புதுக்கோட்டை சாலையில் உள்ள எல்ஐசி அலுவலகத்திற்கு பூட்டு போட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்ட காவிரி உரிமை மீட்புக்குழுவினர் கைது செய்யப்பட்டனர்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications