நாளை காவிரி ஆணைய கூட்டம்.. தண்ணீர் திறப்பு குறித்து தமிழக அரசு முறையிடும்

முதல் காவிரி ஆணைய கூட்டம் நாளை நடக்க உள்ள நிலையில், காவிரியில் தொடர்ந்து தண்ணீர் வெளியிட கோரி தமிழக அரசு கூட்டத்தில் முறையிட உள்ளது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: முதல் காவிரி ஆணைய கூட்டம் நாளை நடக்க உள்ள நிலையில், காவிரியில் தொடர்ந்து தண்ணீர் வெளியிட கோரி தமிழக அரசு கூட்டத்தில் முறையிட உள்ளது.

முதல் காவிரி ஆணைய கூட்டம் நடக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. ஆணையத்தின் தலைவர் மசூத் ஹூசைன் தலைமையில் டெல்லியில் நடைபெறுகிறது.இதற்கான அதிகாரப்பூர்வ அழைப்பிதழ் 4 மாநில அரசுகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

Cauvery Management: TN will speak about various issues in the first meeting of Authority

காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டத்தில் எவ்வளவு தண்ணீர் எந்த தேதியில் திறக்கப்பட வேண்டும் என்று முடிவு வெளியாகும். தமிழக பிரதிநிதியான பொதுப்பணி முதன்மை செயலாளர் பிரபாகர் கூட்டத்தில் பங்கேற்கிறார்.

இதில் பல விஷயங்களை வலியுறுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. கடந்த மாதம் போலவே கர்நாடக அரசு தொடர்ந்து நீர் திறக்க ஆணைய கூட்டத்தில் வலியுறுத்தஉள்ளது. காவிரி ஆணையத்திற்கு எதிராக கர்நாடகா உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க உள்ளது பற்றியும் முறையிட முடிவு செய்துள்ளது.

ஜூலை-ஆகஸ்ட்டில் 80டிஎம்சி நீரை கர்நாடகா திறக்க தமிழக பிரதிநிதி வலியுறுத்த முடிவு செய்துள்ளது. ஏற்கனவே நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை காரணமாக ஜூன் மாதத்தில் தமிழகத்திற்கு 11 டிஎம்சி நீர் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+