ரயில் மறியல் : சென்னையில் வைகோ, திருமா, சீமான் கைது #Cauvery
சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி சென்னை எழும்பூர், சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட வைகோ, திருமாவளவன், சீமான் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் விவசாயிகள் இரண்டாவது நாளாக இன்று ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு கைதாகி வருகின்றனர்.

வைகோ, திருமாவளவன்
சென்னை எழும்பூரில் நடைபெற்ற போராட்டத்தில் மதிமுக பொது செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ஆகியோர் பங்கேற்றனர். எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து ரயில் தண்டவாளம் வரை ஊர்வலமாக சென்ற போது அரசியல் தலைவர்களுடன் ஏராளமான தொண்டர்களும் வந்ததால் பொதுமக்களின் நலன் கருதி போராட்டக்காரர்களை போலீசார் தடுக்க முயன்ற போது அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

தண்டவாளத்தில் முழக்கம்
போராட்டக்காரர்களில் ஒரு பகுதியினரை மட்டும் ரயில் மறியலில் ஈடுபட காவல்துறையினர் அனுமதி தெரிவித்துள்ளனர். இதையடுத்து ரயில் தண்டவாளத்தில் அமர்ந்து கோஷங்களை எழுப்பிய வைகோ, திருமாவளவன் உள்ளிட்டோரிடம் போலீசார் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சிறிது நேர போரட்டத்திற்கு பின்னர் இவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

சீமான் மறியல் கைது
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மறியலில் ஈடுபடும் முன் நாம் தமிழர் கட்சியினர் உறுதி மொழி எடுத்துக்கொண்டனர். பின்னர் தண்டாவளத்தில் இறங்கி மறியலில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் மறியலில் ஈடுபட்ட அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

தமிழகம் முழுவதும் கைது
தமிழகம் முழுவதும் விவசாயிகள் மற்றும் அரசியல் கட்சியினர் இரண்டாவது நாளாக ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு கைதாகி வருகின்றனர். விவசாயிகளின் மறியல் போராட்டம் காரணமாக இன்று பகலில் இயக்கப்படும் பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சில ரயில்கள் மாற்று பாதையில் இயக்கப்படுகின்றன.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications