தமிழக-கர்நாடக எல்லையில் இப்ப இது தான் நடக்கிறது: லாரி டிரைவர்கள் கவலை
ஓசூர்: தமிழக-கர்நாடக எல்லையில் வைத்து அத்தியாவசியப் பொருட்கள் அந்தந்த மாநில பதிவெண் கொண்ட லாரிகளில் மாற்றப்படுகின்றன.
தமிழகத்திற்கு காவிரி நீரை திறந்துவிடுமாறு உச்ச நீதிமன்றம் கடந்த 5ம் தேதி கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டது. இதையடுத்து அன்று இரவு முதல் தமிழகத்தில் இருந்து கர்நாடகாவுக்கு அரசுப் பேருந்துகள் இயக்கப்படவில்லை. பல லாரிகளும் இயங்கவில்லை.

போலீஸ் பாதுகாப்புடன் அம்மாநில பேருந்துகள் தமிழகத்திற்குள் இயக்கப்பட்டு வந்தன. கடந்த 9ம் தேதி நடைபெற்ற கர்நாடகா பந்திற்கு பிறகு கர்நாடக பேருந்துகளும் தமிழகத்திற்கு இயக்கப்படவில்லை.
தமிழக-கர்நாடக எல்லையில் தொடர்ந்து பதட்டம் நிலவி வருவதால் புளிஞ்சூர் சோதனைச்சாவடி 6 நாட்களுக்கு முன்பு அடைக்கப்பட்டது. இதையடுத்து இரண்டு மாநில லாரிகளும், வாகனங்களும் எல்லைகளில் நிறுத்தப்பட்டு வருகின்றன.
காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் அந்தந்த மாநில லாரிகளில் மாற்றப்பட்டு கொண்டு செல்லப்படுகின்றன. எல்லையில் லாரிகளில் பொருட்களை ஏற்றி, இறக்க கூலி அதிகமாக இருப்பதால் இரு மடங்கு நஷ்டம் ஏற்படுகிறது என லாரி டிரைவர்கள் கவலை அடைந்துள்ளனர்.
கர்நாடக பேருந்துகள் புளிஞ்சூர் சோதனைச்சாவடியில் பயணிகளை இறக்கி விடுகின்றன. பயணிகள் சோதனைச்சாவடியில் இருந்து 10 கிலோமீட்டர் நடந்து திம்பம் செல்கிறார்கள். இந்நிலையில் சோதனைச்சாவடியில் இருந்து திம்பம் வரை தமிழக பேருந்துகளை இயக்குமாறு பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பெங்களூர், மைசூர், சாம்ராஜ்நகர் செல்ல சத்தியமங்கலம் சரியான வழி என்றாலும் அங்குள்ள சாலைகளில் வாகனங்கள் தேங்கி நிற்பதால் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications