காவிரி வழக்கின் தீர்ப்பு ஏமாற்றத்தையே தருகிறது : பொன்.ராதாகிருஷ்ணன்
காவிரி நதி நீர் பங்கீடு வழக்கின் தீர்ப்பு ஏமாற்றத்தைத் தருகிறது என்று பொன். ராதாகிருஷ்ணன் வருத்தம் தெரிவித்துள்ளார்.
மதுரை : காவிரி நதி நீர் பங்கீட்டு வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு தனக்கு ஏமாற்றத்தை அளிப்பதாக மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வருத்தம் தெரிவித்துள்ளார்.
தமிழகத்துக்கான காவிரி நீர் அளவை 177.25 டிஎம்சியாக உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் குறைத்துள்ளது. அதே நேரம் கர்நாடகத்திற்கான நீரின் அளவு அதிகப்படுத்தப்பட்டு இருக்கிறது.

இந்தத் தீர்ப்பால் தமிழக விவசாயிகள் மற்றும் எதிர்க்கட்சியினர் மிகுந்த அதிருப்தி அடைந்து உள்ளனர். தொடர்ந்து தமிழகத்தின் உரிமை பறிக்கப்பட்டு வருவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் இன்று மதுரை விமானநிலையத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் காவிரி நதி நீர் பங்கீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த அவர், காவிரி நதி நீர் பங்கீட்டு வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கவில்லை. மாறாக, வருத்தத்தையே ஏற்படுத்தி உள்ளது என்று அவர் தெரிவித்து உள்ளார்.












Click it and Unblock the Notifications