காவிரி வழக்கு தீர்ப்பு: வரும் 22-ல் தமிழக அரசு அனைத்துக் கட்சிக் கூட்டம்
காவிரி வழக்கின் தீர்ப்பு குறித்து விவாதிக்க வரும் 22-ந் தேதி அனைத்து கட்சிக் கூட்டத்தை கூட்டியுள்ளது.
Subscribe to Oneindia Tamil
Recommended Video

திடீரென காவிரியில் தண்ணீர் திறந்துவிட்ட கர்நாடகா!- வீடியோ
சென்னை: காவிரி வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து ஆலோசனை நடத்த வரும் 22-ந் தேதி தமிழக அரசு அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டியுள்ளது,
காவிரி வழக்கில் தமிழகத்துக்கான நீர் அளவை குறைத்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதேநேரத்தில் கர்நாடகாவுக்கு 14,75 டிஎம்சி கூடுதல் நீரை வழங்கியும் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்துக்கு அநீதி இழைக்கப்பட்ட இந்த விவகாரம் குறித்து விவாதிக்க அனைத்து கட்சிக் கூட்டத்தை கூட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. இதையடுத்து வரும் 22-ந் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது.
முன்னதாக எதிர்க்கட்சியான திமுக 23-ந் தேதியன்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தப்படும் என அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications