ரயிலில் ரூ.5.75 கோடி கொள்ளையடிக்கப்பட்ட வழக்கு: 70 பேர் கொண்ட 7 தனிப்படை போலீசார் தீவிர விசாரணை
சென்னை: சேலம் - சென்னை ரயில் பெட்டியில் ரூ.5.75 கோடி பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த 70 பேர் கொண்ட 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக, சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர்.
சேலத்தில் இருந்து சென்னை எழும்பூருக்கு ரயிலில் ரிசர்வ் வங்கிக்கு கொண்டு வரப்பட்ட பழைய மற்றும் கிழிந்த ரூபாய் நோட்டுகள் ரூ.5.75 கோடி கொள்ளையடிக்கப்பட் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொள்ளை சம்பவம் தொடர்பான வழக்கு சி.பி.சி.ஐ.டி., போலீசாருக்கு மாற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில் எழும்பூர் மற்றும் தாம்பரத்தில் உள்ள சிசிடிவி கேமராவை ரயில்வே போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது, தாம்பரத்தில் உள்ள கேமராவைப் பார்த்தபோது பணம் கொண்டு வந்த ரயில் பெட்டி உடைக்கப்படாமல் இருந்தது. இதனால் தாம்பரம் வரை கொள்ளையடிக்கப்படவில்லை என்பது உறுதியானது.
இதையடுத்து, கொள்ளை நடந்த ரயில் பெட்டியை எழும்பூர் முதல் தாம்பரம் வரை இயக்கி சோதனை ஓட்டம் நடத்தப்படுகிறது. தாம்பரம் ரயில் நிலையத்தில் காட்சிகளை பதிவு செய்ய ரயில் பெட்டி இயக்கப்படுகிறது. ரயில் பெட்டி இயங்கும் போது அதனை சிசிடிவி யில் பதிவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. சிசிடிவி காட்சிகள் தாம்பரம் ரயில் நிலையத்தில் பதிவு செய்யப்படுகிறது. ரயில் பெட்டியுடன் டீசல் எஞ்சினை இணைத்து சோதனை நடைபெறுகிறது.
இதனிடையே இந்த கொள்ளையை விசாரிக்க 70 பேர் கொண்ட 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக, சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர். கொள்ளை சம்பவம் தொடர்பாக சென்னை, சேலம், ஈரோடு, விருதாசலம் ஆகிய பகுதிகளில் விசாராணை மேற்கொள்ள உள்ளதாகவும், தாம்பரம் ரயில் நிலையத்தில் பதிவான சிசிடிவி கேமரா மூலம் தடவியல் துறையினர் ஆய்வு மேற்கொண்டு வருதாகவும் கூறியுள்ளனர்.
-
தமிழ்நாடே குளுகுளுவென மாறப்போகிறது.. 11 மாவட்டங்களில் இன்று கனமழை.. எந்தெந்த மாவட்டம்? -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்!












Click it and Unblock the Notifications