3 மாணவிகள் படுகொலை: தொடரும் மர்மங்கள்- தாளாளர் வாசுகியிடம் சம்பவ நாளில் 5 முறை பேசிய அந்த நபர் யார்?
விழுப்புரம்: கள்ளக்குறிச்சி 3 மாணவிகள் படுகொலை விவகாரத்தில் அவிழ்க்கப்படாத மர்ம முடிச்சுகள் நீள்கின்றன. சர்ச்சைக்குரிய எஸ்விஎஸ் கல்லூரி தாளாளர் வாசுகியிடம் சம்பவ நாளன்று 5 முறை பேசிய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
விழுப்புரம் அருகே பங்காரம் எஸ்.வி.எஸ். இயற்கை மருத்துவ கல்லூரி மாணவிகள் மோனிஷா, சரண்யா, பிரியங்கா கடந்த 23-ந் தேதி மர்மமான முறையில் கிணற்றில் இறந்து கிடந்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கல்லூரி தாளாளர் மகன் சுவாக்கர் வர்மா, கல்லூரி முதல்வர் கலாநிதி ஆகியோரை கைது செய்தனர். கல்லூரி தாளாளர் வாசுகி சென்னை தாம்பரம் நீதிமன்றத்திலும், அவருக்கு உதவியாக இருந்த கூலிப்படையை சேர்ந்தவரான வெங்கடேசன் சைதாப்பேட்டை நீதிமன்றத்திலும் சரணடைந்தனர்.
இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து வாசுகி, வெங்கடேசன், சுவாக்கர் வர்மா, கலாநிதி ஆகியோரை காவலில் எடுத்து சிபிசிஐடி போலீசார் விசாரித்தனர்.
அப்போது கல்லூரி தாளாளர் வாசுகி, தனது காரில் முக்கிய ஆவணங்கள் உள்ளதாக கூறியிருக்கிறார். பின்னர் சிபிசிஐடி போலீசார் கள்ளக்குறிச்சியில் உள்ள வாசுகியின் வீட்டுக்கு சென்றனர். அங்கு நிறுத்தப்பட்டிருந்த காரின் சாவி இல்லாததால் அதன் கண்ணாடியை உடைத்து போலீசார் சோதனை நடத்தினர்.
அந்த காரில் 3 செல்போன்கள் மற்றும் சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. 3 மாணவிகள் உயிரிழந்த சம்பவத்தன்று வாசுகியின் ஒரு செல்போனில் ஒரு நபர் 5 முறை பேசியிருக்கிறார். அந்த மர்ம நபர் குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
எங்களை எப்படியாவது காப்பாத்துங்க.. அமெரிக்கா - இந்தியாவிடம் கெஞ்சும் வங்கதேசம்.. ரஷ்யா உதவுமா? -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர்












Click it and Unblock the Notifications