உடுமலைப்பேட்டை போலீஸ் ஸ்டேஷனில் பெண் பலாத்காரம்.. எஸ்.ஐ. உட்பட 3 போலீசாரை கைது செய்தது சி.பி.ஐ.!!
திருப்பூர்: உடுமலைப்பேட்டை போலீஸ் ஸ்டேஷனில் சந்திரா என்ற பெண் கடந்த ஆண்டு பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் எஸ்.ஐ. விஜயகுமார் உட்பட 3 போலீசாரை சி.பி.ஐ. அதிரடியாக நேற்று இரவு கைது செய்துள்ளது.
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் தனியார் உணவகத்தில் சமையல் உதவியாளராக பணிபுரிந்து வந்தவர் சந்திரா. அவரது வீட்டின் உரிமையாளர் மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டார்.

இதற்காக கடந்த ஆண்டு ஆகஸ்ட் 11-ந் தேதி அவர் உடுமலைப்பேட்டை போலீஸ் ஸ்டேஷனுக்கு போலீசாரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு சில போலீசாரால் மிகக் கொடூரமாக சந்திரா சித்ரவதை செய்யப்பட்டு மிக மோசமான முறையில் பலாத்காரம் செய்யப்பட்டார்.
இது குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த சந்திராவின் மகள் ராஜகுமாரி, இச்சம்பவம் குறித்து சி.பி.ஐ. விசாரிக்க கோரிக்கை விடுத்திருந்தார். இதை ஏற்று சென்னை உயர்நீதிமன்றம் சந்திரா வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டார்.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இந்த வழக்கை சி.பி.ஐ. கையில் எடுத்தது. ஆனால் ஓராண்டாகியும் எந்த ஒரு முன்னேற்றமும் ஏற்படாமலேயே இருந்து வந்தது.
அண்மையில் விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கு குறித்து சட்டசபையில் அறிக்கை தாக்கல் செய்த முதல்வர் ஜெயலலிதாவும், ஓராண்டாகியும் உடுமலைப்பேட்டை சந்திரா வழக்கில் சி.பி.ஐ. நடவடிக்கை எடுக்கவில்லை என்பதை சுட்டிக்காட்டியிருந்தார்.
இந்நிலையில் சி.பி.ஐ. போலீசார் நேற்று 10 போலீஸ் அதிகாரிகளிடம் துருவித் துருவி விசாரணை நடத்தினர். இதன் பின்னர் சப் இன்ஸ்பெக்டர் விஜயகுமார், கான்ஸ்டபிள்கள் திலக்குமார், ரங்கநாயகம் ஆகியோரை நேற்று இரவு சி.பி.ஐ. சிறப்பு கிரைம் பிராஞ்ச் போலீசார் கைது செய்தனர். இன்று இந்த மூவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.
-
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்? -
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே? -
நாடு முழுதும் ESMA அமல்.. கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் மத்திய அரசு அதிரடி.. மீறினால் அவ்வளவுதான்












Click it and Unblock the Notifications