பேரறிவாளன் மனுவை நிராகரிக்க தடா கோர்ட்டில் சி.பி.ஐ மனு!
Subscribe to Oneindia Tamil

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் எஞ்சிய விசாரணையை நீதிமன்றம் கண்காணிக்க கோரி, இந்த வழக்கில் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் உள்ள பேரறிவாளன் சென்னை தடா நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவிற்கு சி.பி.ஐ இன்று பதில் மனு தாக்கல் செய்துள்ளது. அதில், விசாரணையை நீதிமன்றம் கண்காணிக்குமாறு பேரறிவாளன் மனு செய்ய முடியாது என்றும், விசாரணைக்கு உகந்ததல்ல என கூறி பேரறிவாளன் மனுவை தள்ளபடி செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து, வழக்கு விசாரணையை நவம்பர் 11ஆம் தேதிக்கு தடா நீதிமன்றம் ஒத்திவைத்தது.












Click it and Unblock the Notifications