For Daily Alerts
Just In
திருப்பூரில் செல்போன் வெடித்து 9ஆம் வகுப்பு மாணவன் காயம்.. பாட்டு கேட்ட போது விபரீதம்
திருப்பூரில் செல்போன் வெடித்து 9 ஆம் வகுப்பு மாணவன் காயமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர்: தாராபுரம் செல்போன் வெடித்து 9 ஆம் வகுப்பு மாணவன் காயமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தாராபுரம் அடுத்த மூலனூரைச் சேர்ந்தவர் பால்ராஜ். அப்பகுதியில் உள்ள பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வரும் இந்த மாணவர் இன்று தனது செல்போனில் வழக்கம் போல் பாட்டு கேட்டுள்ளார்.
பின்னர் செல்போனை தனது பேன்ட் பாக்கெட்டில் வைத்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக செல்போன் வெடித்து சிதறியது.
இதில் அந்த மாணவர் படுகாயமடைந்தார். இதையடுத்து மாணவர் பால்ராஜ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Comments
English summary
Cellphone blast in Thirupur. 9th standard student Paulraj injured and has been admitted in hospital.