சென்னையில் பறக்கும் ரயிலை தகர்க்க மீண்டும் சதி.. சைலேந்திர பாபுவுக்கு "சவால்" விடும் சமூகவிரோதிகள்!
Recommended Video

சென்னை: சென்னையில் தண்டவாளத்தில் கல் வைத்து பறக்கும் ரயிலை கவிழ்க்க சதி திட்டம் தீட்டப்பட்டது. எனினும் அது முறியடிக்கப்பட்டது.
கடந்த வெள்ளிக்கிழமை இரவு வேளச்சேரியிலிருந்து கடற்கரை நோக்கி ரயில் ஒன்று புறப்பட தயாரானது. அப்போது வேளச்சேரி- பெருங்குடி ரயில் நிலையங்களுக்கு இடையே சென்றபோது ரயிலின் அடிபாகத்திலிருந்து பெரும் சப்தம் எழுந்தது.

இதையடுத்து ரயிலின் டிரைவர் பாதி வழியில் நிறுத்திவிட்டு பார்த்தார். அப்போது தண்டவாளத்தில் சிமென்ட் கற்கள் சிதறி கிடந்தன. இதையடுத்து வேளச்சேரி ரயில் நிலைய அதிகாரி சம்பவ இடத்தில் சென்று பார்த்த போது தண்டவாளத்தில் சிமென்ட் சிலாப்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து திருவான்மியூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் சிந்தாதிரிப்பேட்டை ரயில் நிலையத்துக்கு நேற்று தமிழக ரயில்வே போலீஸ் ஏடிஜிபி சைலேந்திர பாபு வந்திருந்தார்.
அவர் வேளச்சேரி நோக்கி சென்ற பறக்கும் ரயிலில் ஏறி ஒவ்வொரு ரயில் நிலையமாக சென்று ஆய்வு செய்தார். அதுபோல் வேளச்சேரியில் சிமென்ட் சிலாப் வைக்கப்பட்ட இடத்துக்கு சென்றும் ஆய்வு மேற்கொண்ட அவர் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில் பெருங்குடி- தரமணி இடையே இயக்கப்பட்டு வரும் பறக்கும் ரயில் தண்டவாளத்தில் ரயிலை தகர்க்க சிமென்ட் சிலாப் வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள், ரயில் பாதுகாப்புப் படையினர் உள்ளிட்டோர் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏடிஜிபி சைலேந்திர பாபு ஆய்வு செய்த நிலையில் இரண்டாவது முறையாக ரயிலை தகர்க்க நடத்தப்பட்ட முயற்சி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications