ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்ப்பவர்கள் என்ன விஞ்ஞானிகளா?.. கேட்கிறார் பொன்.ராதாகிருஷ்ணன்
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ஆராயாமலேயே அந்த திட்டத்தை எதிர்ப்பவர்கள் என்ன விஞ்ஞானிகளா? என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இயற்கை எரிவாயு எடுக்க ஜெம் நிறுவனத்துக்கு மத்திய அரசு கடந்த 14-ஆம் தேதி அனுமதி அளித்தது. இந்தத் திட்டத்தால் விவசாய நிலங்கள் நாசமாவதுடன், அப்பகுதிவாசிகளுக்கு உடல்நலக் கோளாறுகள் ஏற்படும் என்று கூறி ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு நெடுவாசல் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் கண்களில் கருப்புத் துணிக் கட்டி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்தத் திட்டத்தை முழுமையாக கைவிடும் வரை தங்களது போராட்டம் தொடரும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கு மாணவர்கள், தமிழ் அமைப்புகள், திரைத்துறையினர் உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். ஜல்லிக்கட்டை போன்ற மிகப் பெரிய போராட்டம் நடைபெற்று வருகிறது.
மக்கள் நலத்திட்டங்களை ஆகாயத்திலா மேற்கொள்ள முடியும் என்றும், தனிமனிதனும் தியாகம் செய்தால்தான் நாடு நன்றாக இருக்கும் என்றும் மாநிலங்களவை உறுப்பினர் இல.கணேசன் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்திருந்தார்.
மத்திய அரசின் திட்டம் குறித்து மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவிக்கையில், ஒரு திட்டத்தையும் ஆராயாமல் ஆள் ஆளுக்கு எதிர்க்கிறார்கள். இவர்கள் என்ன விஞ்ஞானிகளா? ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த மக்கள் விரும்பவில்லை என்றால் அந்தத் திட்டம் செயல்படுத்தப்படாது.
தமிழகத்தில் பெய்யும் மழை நீரை சேமிக்காமல் கடலில் சென்று வீணாக கலக்கிறது. இதற்கு மாநில அரசு என்ன நடவடிக்கை எடுத்தது? தமிழகத்துக்கு வரும் லட்சுமியை ஏன் வேண்டாம் என்று சொல்ல வேண்டும். பாஜகவை சேர்ந்த இருவேறு தலைவர்களும் முன்னுக்குப் பின் முரணான கருத்துகளை கூறியுள்ளதால் பொதுமக்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications