சென்ட்ரல் குண்டுவெடிப்பு விசாரணை சவாலாக உள்ளது: போலீஸ் அதிகாரி ஒப்புதல்
சென்னை: சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடந்த கவுஹாத்தி ரயில் குண்டு வெடிப்பு சம்பவத்தில் குற்றவாளியை கண்டுபிடிப்பது மிகவும் சவாலாக உள்ளது என்று சிபிசிஐடி ஐ.ஜி.மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்தார்.
மே 1ம்தேதி சென்னை சென்ட்ரலில் நின்றுகொண்டிருந்த கவுஹாத்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் குண்டுவெடித்ததில் 1 பெண் உயிரிழந்தார், 14 பேர் படுகாயமடைந்தனர்.

இந்த வழக்கை தமிழக சிபிசிஐடி விசாரித்து வருகிறது. வழக்கின் நிலை பற்றிய செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்த சிபிசிஐடி போலீஸ் ஐ.ஜி. மகேஷ்குமார் அகர்வால்,
சென்ட்ரல் குண்டுவெடிப்பு விசாரணை சரியான கோணத்தில் சென்று கொண்டுள்ளது. விசாரணையில் சில ஆக்கப்பூர்வமான தகவல்கள் கிடைத்துள்ளன. அந்த ரயிலில் பயணித்தோர் அனைவரின் விவரத்தையும் பெற்றுள்ளோம். ஒவ்வொருவரிடமும் விசாரித்து வருகிறோம்.
ரயில் பயணித்த ரயில் நிலைங்கள் வாரியாகவும் விசாரணையை நடத்தி வருகிறோம். பொதுமக்களில் 200க்கும் மேற்பட்டோர் காவல் துறையின் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு விவரங்கள் அளித்துள்ளனர். இந்த சம்பவத்தை பொறுத்தளவில் குண்டு வைத்தது யார், எங்கே வைக்கப்பட்டது என்பதை கண்டறிவதுதான் சவாலாக உள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications