விவசாயிகள் மண் சோறு சாப்பிட்டது கண்ணீர் வரவைத்து விட்டது: ஈவிகேஎஸ்.இளங்கோவன் உருக்கம்
விவசாயிகளின் பிரச்சனையை கேட்கக்கூட மத்திய அரசுக்கு நேரமில்லை ஈவிகேஎஸ்.இளங்கோவன் சாடியுள்ளார்.
சென்னை: விவசாயிகள் விவசாயிகளின் பிரச்சனையை கேட்கக்கூட மத்திய அரசுக்கு நேரமில்லை ஈவிகேஎஸ்.இளங்கோவன் சாடியுள்ளார். விவசாயிகளின் கடன்களை ரத்து செய்வதில் மத்திய அரசுக்கு என்ன பிரச்சனை என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
விவசாயிகள் மண் சோறு சாப்பிட்டது கண்ணீர் வரவைத்து விட்டது என்றும் அவர் கூறியுள்ளார்.
தமிழக விவசாயிகள் டெல்லியில் நடத்தி வரும் போராட்டம் இன்று 30வது நாளாக நீடிக்கிறது. அவர்களுக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் இன்று டெல்லியில் போராடும் விவசாயிகளை நேரில் சந்தித்தார்.

வேதனை அளிக்கிறது
அப்போது விவசாயிகளின் போராட்டத்துக்கு அவர் ஆதரவு தெரிவித்தார். மேலும் 30 நாளாக போராடி வரும் விவசாயிகளை பிரதமர் சந்திக்க மறுப்பது வேதனை அளிப்பதாக அவர் கூறினார்.

கண்ணீர் வரவழைத்துவிட்டது
விவசாயிகளுக்கு எதிராக எச்.ராஜா உள்ளிட்ட பாஜக தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர் என்று கூறிய ஈவிகேஎஸ்.இளங்கோவன், விவசாயிகள் மண் சோறு சாப்பிட்டது கண்ணீர் வரவைத்து விட்டது என்றும் இளங்கோவன் கூறியுள்ளார்.

மத்திய அரசுக்கு கண்டனம்
விவசாயிகள் பிரச்சனையில் மத்திய அரசு காலம் தாழ்த்துவதற்கு அவர் கண்டனம் தெரிவித்தார். விவசாயிகள் பிரச்சனையை தீர்க்க மத்திய அரசு முன்வர வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசுக்கு என்ன பிரச்சனை?
விவசாயிகளின் கடன்களை ரத்து செய்வதில் மத்திய அரசுக்கு என்ன பிரச்சனை? என்று கேள்வி எழுப்பிய அவர், விவசாயிகளின் பிரச்சனைகளை கேட்கக்கூட மத்திய அரசுக்கு நேரமில்லை என்றும் குற்றம்சாட்டினார்.












Click it and Unblock the Notifications