காவிரி மேலாண்மை வாரியம்- கர்நாடக தேர்தல் முடியும் வரை மத்திய அரசு வாய் திறக்காது : சீமான்
காவிரி மேலாண்மை வாரியம் குறித்து கர்நாடக சட்டசபைத் தேர்தல் முடியும் வரை மத்திய அரசு வாய் திறக்காது என்று சீமான் தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர் : காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து கர்நாடக சட்டசபைத் தேர்தல் முடியும் வரை மத்திய அரசு வாய்திறக்காது என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் விதித்துள்ள ஆறு வாரக்கெடு இன்றுடன் முடிவடைந்த நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அமைச்சர்களுடன் அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.

இந்நிலையில், தமிழக அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக்குழு சார்பில் டெல்லியில் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. அதேபோல தமிழகத்திலும் போராட்டம் வெடித்துள்ளது.
இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறுகையில், தமிழகத்திற்கான திட்டங்களைச் செயல்படுத்துவதில் எப்போதும் மத்திய அரசு சுணக்கம் காட்டி வருகிறது. தமிழக ஆட்சியாளர்களும் தங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காக அதுகுறித்து வாய்திறக்காமல் இருக்கிறார்கள்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு விதித்த போதே, மத்திய அரசு இதைச் செயல்படுத்தாது என்று நான் தெரிவித்தேன். தற்போது அதேபோல் நடந்துள்ளது. சட்டரீதியான நடவடிக்கையே இனி ஒரே தீர்வு.
இந்த விவகாரத்தில் மத்திய அரசுக்கு தமிழக அரசு போதிய அழுத்தம் தரத்தவறிவிட்டது. கர்நாடக சட்டசபைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், தேர்தல் முடியும் வரை மத்திய அரசு இதுகுறித்து வாய் திறக்காது என்று சீமான் தெரிவித்துள்ளார்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications