காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு மீண்டும் எதிர்ப்பு
Recommended Video

டெல்லி: உச்சநீதிமன்ற உத்தரவின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு மீண்டும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
20 ஆண்டுகளுக்கு மேலாக இருந்த காவிரி வழக்கில் கடந்த வாரம் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதில் தமிழகத்துக்கு 177.25 டிஎம்சி தண்ணீரை திறந்து விட கர்நாடக அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதுமட்டுமல்லாது காவிரி மேலாண்மை வாரியத்தை 6 மாதங்களுக்குள் அமைக்க மத்திய அரசு முன்வர வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதற்கு கர்நாடக அரசு எதிர்ப்பு தெரிவித்தது. இது 15 ஆண்டுகளுக்கு தீர்ப்பு செல்லும் என்பதால் இந்த தீர்ப்பை அமல்படுத்தியே தீர வேண்டும் என்று தமிழக அரசு எண்ணி கொண்டிருக்கிறது.
ஆனால் கர்நாடகத்தில் இந்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இதில் காங்கிரஸை ஓரம் கட்ட காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரும் உத்தரவில் கர்நாடகத்துக்கு சாதகமாக நடந்து கொள்ள பார்ப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அதன்படி நதிநீர் பிரச்சினைகளுக்கு ஒரே தீர்ப்பாயம் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான சட்டதிருத்த மசோதாவை பட்ஜெட் கூட்டத் தொடரிலேயே தாக்கல் செய்யவுள்ளது.












Click it and Unblock the Notifications