மஸ்ரத் ஆலம் விடுதலை: பாஜகவின் இரட்டை வேடம் அம்பலம் – ஜி.கே.வாசன் குற்றச்சாட்டு
சென்னை: மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா அரசு காஷ்மீரில் ஒரு நிலைபாடும், டெல்லியில் ஒரு நிலைபாடும் கொண்டுள்ளது என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் குற்றம் சாட்டியுள்ளார். தீவிரவாதம்-பிரிவினைவாதம் ஆகியவற்றை ஒரு போதும் ஏற்கமாட்டோம் என்றும் அவர் கூறியுள்ளார்.
சாந்தோமில் நடந்த விழாவில் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் முன்னிலையில் பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் த.மா.கா.வில் இணைந்தனர். அவர்களுக்கு கட்சியின் அடையாள அட்டையை வழங்கினார் ஜி.கே.வாசன்.
இணைப்பு விழாவின் போது ஜி.கே.வாசன் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

300 பேர் இணைப்பு
வடசென்னை, காஞ்சீபுரம், விழுப்புரம், சேலம் ஆகிய மாவட்டங்களில் இருந்து பல்வேறு கட்சிகளை சேர்ந்த சுமார் 300 பேர் இன்று த.மா.க.வில் தங்களை இணைத்துக்கொண்டு உள்ளனர்.

கட்சியின் பலம்
மாநிலம் முழுவதும் பலதரப்பினரும் எங்கள் இயக்கத்தில் சேருவதன் மூலம் கட்சியின் பலம் அதிகரித்து வருகிறது.

நியாயமான கோரிக்கை
நேற்று முதல் பார்வையற்ற சகோதர-சகோதரிகள் தங்களின் நியாயமான கோரிக்கைக்காக உண்ணாவிரதத்தை நடத்தி வருகிறார்கள். அரசு அவர்களது கோரிக்கைகளுக்கு செவி சாய்த்து அதை நிறைவேற்ற வேண்டும்.

பாஜக அரசு
தீவிரவாதம்-பிரிவினைவாதம் ஆகியவற்றை ஒரு போதும் ஏற்கமாட்டோம். மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா அரசு காஷ்மீரில் ஒரு நிலைபாடும், டெல்லியில் ஒரு நிலைபாடும் கொண்டு உள்ளதை கண்டிக்கிறோம்.

அதிகாரி தற்கொலை
நெல்லையில் வேளாண்மை துறை அதிகாரி மரணத்தில் ஏற்பட்டு உள்ள சந்தேகத்தை போக்க வேண்டியது அரசின் கடமை. சி.பி.சி.ஐ.டி. விசாரணையின் மூலம் உண்மை வெளிவரும் என்று நம்புகிறேன்.

ரணில் பேச்சுக்கு கண்டனம்
இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே பொறுப்பான பதவியில் இருந்து கொண்டு பொறுப்பற்ற முறையில் பேசியது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

மீனவர்களிடையே அச்சம்
அவரது பேச்சால் தமிழக மீனவர்கள் மத்தியில் அச்சம் நிலவுகிறது. தமிழக மீனவர்களின் பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் பிரதமரின் இலங்கை சுற்றுப்பயணம் அமைய வேண்டும் என்றும் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications