தமிழர் திருநாளுக்கு பொதுவிடுமுறை இல்லை! வட இந்திய கட்சி என நிரூபித்தது பாஜக!!
பொங்கலுக்கு கட்டாய பொதுவிடுமுறை இல்லை என அறிவித்துள்ளது மத்திய பாஜக அரசு. தமிழர் திருநாளன்று கட்டாய விடுமுறை இல்லை என மத்திய அரசு அறிவித்திருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை: தமிழகம் சார்ந்த பிரச்சனைகளில் மத்திய அரசு தொடர்ந்து துரோகம் இழைத்து வருகிறது. தற்போது பொங்கல் திருநாளுக்கு கட்டாய பொதுவிடுமுறை என்பதை ரத்து செய்துவிட்டு விருப்ப விடுமுறையாக எடுத்து கொள்ளலாம் என அறிவித்திருக்கிறது மத்திய அரசு.
தமிழகம் என்றாலே மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் செயல்படுவதையே வழக்கமாக வைத்திருக்கிறது. உச்சநீதிமன்றமே உத்தரவிட்டும் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மறுத்து 100-க்கு மேற்பட்ட விவசாயிகள் மாண்டுபோக காரணமாக இருக்கிறது.

மீனவர் பிரச்சனைக்கு தீர்வு காணாமாலே இழுத்தடித்து வருகிறது. ஜல்லிக்கட்டு தடையை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை செவிகொடுத்து கேட்க தயாராகவும் இல்லை.
இப்போது தமிழர் திருநாளாம் பொங்கல் விடுமுறையில் கை வைத்திருக்கிறது மத்திய அரசு. ஜனவரி 14-ந் தேதி பொங்கல் திருநாள் அன்று கட்டாய பொதுவிடுமுறை என்பது நடைமுறையில் இருந்து வருகிறது.
தற்போது பொதுவிடுமுறை பட்டியலில் இருந்து பொங்கல் திருநாள் நீக்கப்பட்டுள்ளது. மேலும் பொங்கல் திருநாளன்று விருப்ப விடுமுறையாக எடுத்துக் கொள்ளலாம் என அறிவித்துள்ளது தமிழகத்தை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
பாரதிய ஜனதா கட்சியை எப்போதுமே வட இந்தியா கட்சியாகத்தான் தமிழகம் பார்க்கிறது. தற்போது பாஜக, தமிழர் திருநாளாம் பொங்கலுக்கான பொதுவிடுமுறையை ரத்து செய்திருப்பதன் மூலம் ஆம் நாங்க வட இந்தியா கட்சிதான் என நிரூபித்தேவிட்டது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications