குடியரசு தலைவர் ஆட்சி வேண்டும்-சு.சாமி: மத்திய படை வரவேண்டும்-விஜயகாந்த்
சென்னை: தமிழகத்தில் குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று சுப்பிரமணியன் சுவாமியும், மத்திய பாதுகாப்பு படையை அனுப்ப வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த்தும் கேட்டுக்கொண்டுள்ளனர்.
ஜெயலலிதா குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்ட உடனேயே தமிழகத்தில் ஆங்காங்கு கலவரங்கள் வெடித்தன. இந்நிலையில், மாலையில், ஜெயலலிதாவுக்கு நான்காண்டு சிறை தண்டனை என்று அறிவிக்கப்பட்டதும், கலவரம் மேலும் பரவியது.
இதுகுறித்து ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த சுப்பிரமணியன் சுவாமி, தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு கெட்டுவிட்டது. பொதுமக்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை நிலவுகிறது. எனவே ஜனாதிபதி ஆட்சியை இரு மாதங்களுக்கு தமிழகத்தில் அமல்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதனிடையே, விஜயகாந்த் கூறுகையில், "தமிழகத்தில் போலீசார் கலவரங்களை தடுக்கவில்லை. எனவே மத்திய பாதுகாப்பு படையை தமிழகத்துக்கு அனுப்ப வேண்டும்" என்றார்.