ஜெ. தீர்ப்புக்கும், மத்திய அரசுக்கும் தொடர்பே கிடையாது... சொல்கிறார் எச். ராஜா
சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வழக்கில் கர்நாடக உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பில் மத்திய அரசு தலையிடவே இல்லை என்று பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியுள்ளார்.
சொத்துக் குவிப்பு வழக்கில் கீழ் நீதிமன்றம் பிறப்பித்திருந்த தீர்ப்பை எதிர்த்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் அப்பீல் செய்திருந்தனர்.

இந்த மனுக்களை விசாரித்த கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி குமாரசாமி இன்று நால்வரையும் விடுதலை செய்து உத்தரவிட்டார். மேலும் நீதிபதி குன்ஹாவின் தீர்ப்பையும் அவர் ரத்து செய்து விட்டார்.
இதுகுறித்து பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா கருத்து தெரிவிக்கையில், ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில், கர்நாடக உயர்நீதிமன்ற தீர்ப்பில் மத்திய அரசின் தலையீடு கிடையாது. அதற்கும் மத்திய அரசுக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என்று கூறியுள்ளார்.
தர்மத்திற்குக் கிடைத்த வெற்றி இது - சரத்குமார் கருத்து
இதற்கிடையே, அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் தீர்ப்பு குறித்து கருத்து தெரிவிக்கையில், சட்டத்தை மதித்து அமைதியாக இருந்து வெற்றி பெற்றுள்ளார் ஜெயலலிதா. சந்தில் சிந்து பாடி விடலாம் என்று நினைத்தவர்களின் நினைப்பு தோல்வியுற்று விட்டது.
தர்மத்திற்குக் கிடைத்த வெற்றி இது. கீழ் கோர்ட் தீர்ப்பை வழங்கியதுமே இது இறுதித் தீர்ப்பு அல்ல. மேல்முறையீடு செய்து சட்ரீதியாக நான் இதிலிருந்த மீண்டு வருவேன் என்று ஜெயலலிதா கூறியிருந்தார். அதேபோல இதுநாள் அவரை அமைதியாக இருந்து சட்டரீதியாக அவர் விடுதலையாகியுள்ளார் என்று கூறியுள்ளார் சரத்குமார்.












Click it and Unblock the Notifications