டெங்கு காய்ச்சல் பாதிப்பு.. தமிழகத்தில் மத்திய குழு ஆய்வு - வீடியோ
டெங்கு பாதிப்பின் நிலவரம் குறித்து ஆய்வு செய்வதற்காக 5 பேர் கொண்ட மத்திய அரசின் மருத்துவ குழுவினர் தமிழகம் வந்துள்ளனர். சென்னையிலும், சேலத்திலும் மத்திய குழுவினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை: தமிழகத்தில் நிலவும் டெங்கு பாதிப்பின் நிலவரம் குறித்து ஆய்வு செய்வதற்காக 5 பேர் கொண்ட மத்திய அரசின் மருத்துவ குழுவினர் சென்னை வந்துள்ளனர். இந்த குழுவில் அசுதோஷ் பீஷ்வாஸ், ஸ்வாதி துப்லிஸ், கவுஷல் குமார், கல்பனா பர்வா, வினய் கரக் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
உயிர்க்கொல்லி நோயாக டெங்கு காய்ச்சல் பல்கிப் பெருகி வருகிறது. நாள்தோறும் 10 பேராவது டெங்குவிற்கு பலியாவது தொடர்கதையாகி வருகிறது.

டெங்குவை கட்டுப்படுத்துவதற்கான விழிப்புணர்வு முயற்சிகளில் அரசுடன் இணைந்து அரசியல் கட்சிகள், தொண்டு நிறுவனங்களும் களத்தில் இறங்கியுள்ளனர்.
தமிழகம் வந்துள்ள மத்திய குழுவினர் இரண்டாவது நாளாக இன்று சென்னையிலும் சேலத்திலும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
சேலம் மாவட்டத்தில் டெங்கு தாக்கம் அதிகமாக இருப்பதால் மத்திய குழு அங்கு சென்று ஆய்வு செய்து வருகின்றனர். இந்த குழுவினர் சேலம், தருமபுரியில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications