கட்சிகளின் புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை... ஸ்ரீரங்கம் தேர்தல் அதிகாரிகளுக்கு சக்சேனா உத்தரவு
திருச்சி: கட்சிகள் கொடுக்கும் புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்ரீரங்கம் தொகுதி தேர்தல் அதிகாரிகளுக்கு தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா உத்தரவிட்டுள்ளார்.
ஸ்ரீரங்கம் சட்டசபைத் தொகுதிக்கு வரும் 13ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக வேட்பாளர்கள் மற்றும் கட்சித் தலைவர்கள் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கிடையே ஆளுங்கட்சியினரின் முறைகேடுகள் குறித்து புகார் கொடுத்தால் தேர்தல் அலுவலர் மனோகரன் உடனடியாக நடவடிக்கை எடுப்பதில்லை என்று திமுக உள்ளிட்ட கட்சிகள் குறை கூறி வருகின்றன. மேலும் தேர்தல் அதிகாரிகள், அதிமுகவினருக்கு சாதகமாக நடப்பதாகவும் புகார்கள் குவிந்து வருகின்றன.
இந்நிலையில், சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார் தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா.
அப்போது அவர் கூறியதாவது:-
அரசியல் கட்சிகள் கொடுக்கும் புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்ரீரங்கம் தொகுதி தேர்தல் அதிகாரிகளுக்கு உத்தரவிடப் பட்டுள்ளது.
தேர்தல் பிரச்சாரத்திற்காக வெளி மாநிலங்கள் மற்றும் வெளியூர்களில் இருந்து வந்துள்ள கட்சியினர் பிப்ரவரி 11ம் தேதி மாலை 6 மணிக்குள் ஸ்ரீரங்கத்தை விட்டு வெளியேற வேண்டும்' எனத் தெரிவித்தார்.
இதேபோல், ஸ்ரீரங்கத்தில் இம்மாதத்தில் மட்டும் 2 சதவீதம் மது விற்பனை அதிகரித்துள்ளதாகக் கூறிய சக்சேனா, இது தொடர்பாக விசாரணை நடத்தப்படும் எனத் தெரிவித்தார்.
-
சர்ச்சை பேச்சு விவகாரம்.. முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு மீண்டும் சம்மன் அனுப்ப நீதிமன்றம் உத்தரவு! -
காங்கிரஸை நாயுடன் ஒப்பிட்ட நடிகர் போஸ் வெங்கட்! கைநழுவும் அறந்தாங்கி தொகுதி சீட்? டென்ஷன் -
“ஒரு கார் வாங்குற தகுதி கூட கேப்டன் குடும்பத்திற்கு இல்லையா?”.. பிரேமலதா விஜயகாந்த் ஆவேசம்! -
கலைஞர் மகள் கனிமொழிக்கே சீட் இல்லை.. உதயநிதிக்கும் சிக்கல் வரும்னு பயம்! விளாசிய நாம் தமிழர் சீமான்! -
நம்பி நம்பி.. வெம்பி வெம்பி.. அல்வா போல அள்ளிட்டுப் போன அண்ணியார்! வேதனையில் திருமா எடுத்த முடிவு! -
2026 தேர்தலே டல் அடிக்குது.. என்னதான் ஆச்சு திமுக, அதிமுகவுக்கு! 2021ல் இந்நேரம் எல்லாமே பினிஷ்! -
திமுக விட்டுக் கொடுத்துள்ளதால்.. நாங்களும் இறங்கினோம்.. மனம் திறந்த திருமாவளவன் -
கள்ளக்குறிச்சியை கையில் எடுத்த திருமாவளவன்! விசிகவின் 15 Stronghold உத்தேச பட்டியல்! -
தலித்துகள் என்றால் ஏளனமா? திமுக - விசிக கூட்டணி அவசியமா? தமிழன் பிரசன்னாவை நோக்கி இளைஞர்கள் கேள்வி! -
எடப்பாடி பழனிச்சாமி சாமர்த்தியம்.. பாஜகவை கண்ட்ரோல் செய்துட்டாரே.. தொகுதி ஒதுக்கீட்டில் ஓங்கிய அதிமுக கை! -
சீட்டுக்கு மட்டும் பேசும் திருமா! தமிழகம் வாழ..திமுக வீழ வேண்டும்! செய்வீர்களா? ஜெ ஸ்டைலில் எடப்பாடி -
எங்க வந்து யாருக்கிட்ட.. கொங்கு மண்டலத்துக்கு உதயநிதி மாஸ் பிளான்.. களமிறங்கும் இளைஞரணி












Click it and Unblock the Notifications