ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை வாக்குப்பதிவு நிலவரம் அறிவிக்கப்படும் : ராஜேஷ் லக்கானி

ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை வாக்குப்பதிவு நிலவரம் அறிவிக்கப்படும் என்று ராஜேஷ் லக்கானி தெரிவித்து உள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை : ஆர்.கே நகர் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு குறித்து ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை நிலவரம் அறிவிக்கப்படும் என்று தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்து உள்ளார்.

பெரும் அமளிதுமளிக்கு நடுவே ஆர்.கே நகர் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 8 மணி முதல் தொடங்கி நடந்து வருகிறது. காலை முதலே பெரும் ஆர்வத்துடன் மக்கள் வரிசையில் நின்று தங்கள் வாக்குகளை பதிவு செய்து வருகிறார்கள்.

 CEO Rajesh Lakhoni says that Polling details will be announced by every one Hour

வாக்குப்பதிவு நடைபெறும் 256 வாக்குச்சாவடிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. காவல்துறை மற்றும் துணை ராணுவப்படை ஆகியோர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளனர். வாக்குப்பதிவு வெப் கேமரா மூலம் பதிவு செய்யப்பட்டு, நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

இதற்கான ரிப்பன் மாளிகையில் உள்ள சிறப்பு கட்டுப்பாட்டு அறையில் அதிகாரிகள் அந்த வீடியோக்களை பார்வையிட்டு கண்காணித்து வருகின்றனர். அதுபோல, தலைமை செயலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் இருந்து தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியும் வாக்குப்பதிவை கண்காணித்து வருகிறார்.

இதுகுறித்து அவர் தெரிவிக்கும்போது, ஆர்.கே நகர் தேர்தல் வாக்குப்பதிவை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். இதுவரை எந்தவித பிரச்னையும் இல்லாமல், தேர்தல் நடைபெற்று வருகிறது. ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை வாக்குப்பதிவு நிலவரம் அறிவிக்கப்படும் என்று ராஜேஷ் லக்கானி தெரிவித்து உள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+