பிளஸ் 2 மாணவர்களுக்கு 15ம் தேதி முதல் ஒரிஜினல் சான்றிதழ்கள் - பள்ளிக் கல்வித்துறை
சென்னை: தமிழகத்தில் பிளஸ் 2 மாணவ, மாணவிகள் அசல் மதிப்பெண் சான்றிதழை 15 ஆம் தேதி முதல் பள்ளிக்கூடங்களில் பெற்றுக்கொள்ளலாம் என்று அரசு தேர்வுகள் இயக்குனர் வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 தேர்வு கடந்த மார்ச் மாதம் 5 ஆம் தேதி தொடங்கி மார்ச் மாதம் 31 ஆம் தேதி முடிவடைந்தது. தேர்வை 8 லட்சத்து 75 ஆயிரம் பேர் எழுதினார்கள். தேர்வு முடிவு மே மாதம் 7 ஆம் தேதி வெளியிடப்பட்டது. மாணவர்களுக்கு பிளஸ் 2 மதிப்பெண் விவரம், தேர்வு முடிவுடன் இணையதளத்தில் வெளியிடப்பட்டது.
இந்நிலையில் மாணவர்களுக்கு தற்காலிக சான்றிதழ் இந்த வருடம் பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர் த.சபீதா உத்தரவுப்படி வழங்கப்பட்டது. இதுவரை மாணவர்கள் அசல் மதிப்பெண் சான்றிதழ் இல்லாமல் இருந்தனர். அவர்களுக்கு 15 ஆம் தேதி முதல் அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படுகிறது.
இது குறித்து அரசு தேர்வுகள் இயக்குனர் வசுந்தராதேவி, இணை இயக்குனர் உமா ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "2015 ஆம் வருடம் மார்ச் மாதம் நடைபெற்று முடிந்த பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியிடப்பட்டது. மே மாதம் 14 ஆம் தேதி தற்காலிக சான்றிதழ் பள்ளிகள் மூலம் வழங்கப்பட்டது. 15 ஆம் தேதி அன்று காலை 10 மணி முதல் அசல் மதிப்பெண் சான்றிதழ் அந்தந்த பள்ளிக்கூடங்கள் மூலம் மாணவ-மாணவிகளுக்கு கொடுக்கப்படும். தனித்தேர்வர்கள் அவர்கள் தேர்வு எழுதிய மையத்திலேயே பெற்றுக்கொள்ளலாம்" என்று தெரிவித்துள்ளனர்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications