அட்ரஸ் கேட்பது போல பெண்ணிடம் 5 பவுன் செயின் பறிப்பு.. 2 பேரை கம்பத்தில் கட்டி அடித்த மக்கள்!
கோவை: கோவையில் முகவரி கேட்பது போல பெண்ணிடம் இருந்து நகையை பறித்த இருவரை பொதுமக்கள் மின் கம்பத்தில் கட்டி வைத்து அடித்து நொறுக்கினர்.
கோவை அருகே உள்ள தடாகம் திவ்யா காலனியில் வசித்து வரும் கட்டிட தொழிலாளி முத்துவேலின்(34) மனைவி ஈஸ்வரி(29). அவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். வியாழக்கிழமை காலை முத்துவேல் வேலைக்கு சென்ற பிறகு 8 மணி அளவில் வீட்டுக்கு வெளியே நின்று தனது மகள் அபிநயாவுக்கு ஈஸ்வரி சாப்பாடு கொடுத்துக் கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த இருவர் ஈஸ்வரியிடம் ஒரு கார்டை காட்டி முகவரி கேட்டுள்ளனர். அதற்கு அவர் தனக்கு இந்த முகவரி தெரியாது என்று கூறிக் கொண்டிருக்கையிலேயே ஒருவர் பைக்கில் ஏறி அதை ஸ்டார்ட் செய்தார். அந்த நேரம் பார்த்து மற்றொருவர் ஈஸ்வரியின் கழுத்தில் கிடந்த 5 பவுன் நகையை பறித்துக் கொண்டு ஓட முயன்றார்.
ஈஸ்வரியோ திருடனின் சட்டை காலரை பிடித்து திருடன் திருடன் என்று சப்தம் போட அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். இதை பார்த்த அந்த 2 பேரும் ஓட முயன்றனர். ஆனால் பொதுமக்கள் அவர்களை பிடித்து மின் கம்பத்தில் கட்டி வைத்து அடித்து நொறுக்கினர்.
இது குறித்து தகவல் அறிந்த துடியலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அந்த 2 பேரையும் பொதுமக்களிடம் இருந்து மீட்டு கைது செய்து அழைத்துச் சென்றனர்.
விசாரணையில் அவர்கள் நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையைச் சேர்ந்த கார்த்தி(24) மற்றும் தூத்துக்குடி மாவட்டம் புலியங்குளத்தைச் சேர்ந்த கணேசமூர்த்தி(29) என்பதும் தெரிய வந்தது. போலீசார் அவர்கள் ஓட்டி வந்த பைக் மற்றும் ஈஸ்வரியிடம் இருந்து பறித்த 5 பவுன் நகையை பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே?












Click it and Unblock the Notifications