வெள்ள நிவாரண டோக்கன் தருவதாக வீடு புகுந்து சங்கிலி பறித்த ‘பலே’ திருடன்!
சென்னை: சென்னையில் வெள்ள நிவாரணம் பெற டோக்கன் தருவதாகக் கூறி ஏமாற்றி, வீடு புகுந்து பெண்ணிடம் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற திருடனை போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னையை அடுத்த தாம்பரம், முடிச்சூர் பகுதி வெள்ளத்தால் கடும் பாதிப்புகளைச் சந்தித்தது. தற்போது அப்பகுதியில் அரசின் வெள்ள நிவாரண நிதியைப் பெற கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது. இதனை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட மர்மநபர் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முடிச்சூர் ஏ.என்.காலனி 2வது பிரதான சாலையைச் சேர்ந்த சேதுராமன் என்பவரது மனைவி பத்மாவதி(59). நேற்று முன்தினம் இரவு வீட்டில் தனியாக இருந்த பத்மாவதியிடம், வெள்ள நிவாரணத்துக்கு டோக்கன் அளிக்க வந்துள்ளதாக மர்மநபர் ஒருவர் கூறியுள்ளார்.
இதனை உண்மையென நம்பிய பத்மாவதி அவரை வீட்டிற்குள் அனுமதித்துள்ளார். வீட்டிற்குள் நுழைந்த அந்த நபர் திடீரென பத்மாவதியின் வாயைப் பொத்தி, அவர் அணிந்திருந்த மூன்றரை பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துள்ளார். பின்னர், பத்மாவதியை வீட்டிற்குள் வைத்து பூட்டிவிட்டு, அவர் தப்பிச் சென்றார்.
பத்மாவதியின் அலறல் சத்தம் கேட்டு விரைந்து வந்த அக்கம்பக்கத்தார், அவரைக் காப்பாற்றினர்.
இந்த சம்பவம் தொடர்பாக பீர்க்கன்கரணை போலீசில் பத்மாவதி புகார் அளித்தார். அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வெள்ள நிவாரண நிதி பெறுவது தொடர்பாக மக்களிடம் தொடர்ந்து குழப்பம் காணப்படுகிறது. இதனை தங்களுக்கு சாதகமாகப் பயன் படுத்திக் கொண்டு, திருடர்கள் இவ்வாறு திருட்டுகளில் ஈடுபடுகின்றனர். எனவே, மக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.
-
என்கிட்டயே அழுது சீன் போடுறீயா? நான் என்ன கல்லா.. டிஆர் பாலுவை முற்றுகையிட்ட எஸ்ஆர் ராஜா ஆதரவாளர்கள் -
15 out of 16: சென்னை மாவட்டத்தில் எத்தனை தொகுதிகளில் திமுக போட்டி? சத்யராஜ் மகளுக்கு சீட் இல்லை! -
Gold Price: மீண்டும் ஷாக் கொடுத்த தங்கம் விலை.. ஒரே நாளில் அதிரடி உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம்! -
தமிழகத்தின் முதல் பி.ஆர்.டி.எஸ்.. சென்னையில் பிரம்மாண்ட போக்குவரத்து மாற்றம்.. பணிகள் ஸ்டார்ட்! -
தாம்பரம் படப்பையில் இளம் பெண் 26 வயதில் சந்திக்கக்கூடாத இழப்பு.. யாருக்குமே நடக்கக்கூடாத சம்பவம் -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க












Click it and Unblock the Notifications