கடலோரப் பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
கடலோரப் பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
Subscribe to Oneindia Tamil
சென்னை: கடலோர பகுதிகள் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் தமிழகத்தில் மீண்டும் மழை பரவலாகப் பெய்து வருகிறது. இந்நிலையில், புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் இலங்கை மற்றும் அதனை ஒட்டியுள்ள வங்கக்கடல் பகுதியில் உருவாகி உள்ளது.

தென் இலங்கையை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்ககடலில் இருந்த காற்றழுத்த தாழ்வுய் பகுதி வலுவிழந்துள்ளது. இதனால் கடலோர மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.












Click it and Unblock the Notifications