கோவையில் கைதான மாவோயிஸ்டுகள் 5 பேர் மீது 700 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்!!
கோவை: கோவையில் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட மாவோயிஸ்டுகள் 5 பேர் மீது 700 பக்க குற்றப்பத்திரிகை இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கோவை கருமத்தம்பட்டி பேக்கரியில் கடந்த மே மாதம் மாவோயிஸ்ட் இயக்கத்தின் ரூபேஷ், அவரது மனைவி ஷைனி, அனூப், கண்ணன், ஈஸ்வரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
மாவோயிஸ்டுகள் இயக்கத்தைச் சேர்ந்த இவர்கள் கோவை மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இந்த 5 பேரும் தங்களை ஜாமீனில் விடுவிக்க கோரி தாக்கல் செய்த மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன.
இந்நிலையில் 5 மாவோயிஸ்ட்கள் மீதும் கோவை மாவட்ட அமர்வு நீதிமன்றம் நீதிபதி பொங்கியப்பன் முன்னிலையில் இன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. 5 பேர் மீதும் மொத்தம் 700 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது./












Click it and Unblock the Notifications