செங்கம் போலீஸ் தாக்குதல் சம்பவம்... சென்னை ஹைகோர்டில் பாதிக்கப்பட்ட ராஜா வழக்கு
சென்னை: திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் தமது குடும்பத்தை தாக்கிய போலீஸார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாதிக்கப்பட்ட ஆட்டோ ஓட்டுநர் ராஜா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் டவுன் தோக்கவாடியை சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் ராஜா(38). அவரது மனைவி உஷா(35). மகன் சூர்யா(18). இவர்கள் மூன்று பேரும் நகை வாங்குவதற்காக செங்கம் பழைய பஸ் நிலையம் அருகில் உள்ள நகை கடைக்கு சென்றிருந்தனர். அப்போது நகை வாங்குவது குறித்து கணவன் மனைவி இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து இருவரும் நகைக்கடை வெளியே வாய்த்தகராறில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சென்ற போலீஸார் நம்வாழ்வார், முருகன், விஜயகுமார் ஆகியோர் ராஜா மற்றும் அவரது மனைவியிடம், சண்டை குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர். அப்போது ராஜா இது எங்கள் குடும்பப் பிரச்சனை, நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். நீங்கள் செல்லுங்கள் என கூறியதாக தெரிகிறது.
அப்போது, போலீஸார் மற்றும் ராஜா இடையே பிரச்சனை ஏற்பட்டதையடுத்து, 3 போலீஸாரும் ராஜா, அவரது மகன் சூர்யா ஆகியோரை சரமாரியாக தாக்கினர். இது குறித்த வீடியோ ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனிடையே தாக்குதல் நடத்திய 3 போலீசார் வேலூர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டனர். போலீஸாரின் இந்த கொடூர தாக்குதல் குறித்து அரசியல் கட்சித் தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட ஆட்டோ ஓட்டுநர் செங்கம் போலீசார் மீது நடவடிக்கை எடுக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். அதில் தமது குடும்பத்தை தாக்கிய போலீஸ் மீது நடவடிக்கை தேவை என்றும், தாக்குதல் நடத்திய 3 போலீஸார் மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் எனவும் ராஜா கோரியுள்ளார். இதையடுத்து இந்த வழக்கு அவசர வழக்காக நாளை விசாரிக்கப்படும் உயர் நீதிமன்ற நீதிபதி பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
-
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
கௌதம் மேனனுக்கு எதிராக திரும்பிய வழக்கு.. ரூ4.25 கோடியை வட்டியுடன் செலுத்த ஐகோர்ட் உத்தரவு! -
இயக்குநர் ஷங்கர் சொத்து முடக்கப்பட்டதற்கு விதிக்கப்பட்ட தடை.. சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு! -
Savukku Shankar: சவுக்கு சங்கர் நாளைக்குள் சரண் அடைய வேண்டும்.. இல்லையென்றால் கைது செய்யலாம்! ஐகோர்ட் அதிரடி -
அண்ணா நகர் சிறுமி வழக்கு.. தினமும் விசாரணை நடத்தி விரைந்து முடிக்க ஐகோர்ட் உத்தரவு! -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications