For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

உடல் முழுவதும் தங்கக் கட்டிகளை ஒட்டி வந்த பயணி - சென்னை விமான நிலையத்தில் சிக்கினார்!

Google Oneindia Tamil News

சென்னை: சிங்கப்பூரிலிருந்து கடத்தி வரப்பட்ட 4.2 கிலோ தங்கத்தை சென்னை விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

இன்று சிங்கப்பூரிலிருந்து சென்னை வந்த விமானத்தில் வந்து இறங்கிய சென்னையைச் சேர்ந்த பிரபாகர் என்ற பயணியிடம் விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது, பிரபாகரன் தன் உடல் முழுவதும் தங்க கட்டிகளை ஒட்டி மறைத்து எடுத்து வந்தது கண்டுபிடிக்கப் பட்டது.

அதனைத் தொடர்ந்து பிரபாகரன் உடலில் ஒட்டியிருந்த சுமார் 4.2 கிலோ தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். சட்ட விரோதமாக தங்கம் கடத்தியது தொடர்பாக பிரபாகரனிடம் விமான நிலைய சுங்க அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேநேற்று சிங்கப்பூர் மற்றும் துபாயிலிருந்து சென்னை வந்த இருவேறு பயணிகளிடமிருந்து சுமார் 3 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள 14 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

English summary
In Chennai airport the customs officials have seized 4.2 kg of gold from a passenger.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X