30வது முறையாக உடைந்து நொறுங்கிய சென்னை விமான நிலைய கண்ணாடி.. தொடரும்!
சென்னை: சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் 30 ஆவது முறையாக கண்ணாடிக் கதவு உடைந்து விழுந்ததில் ஒருவர் காயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக நவீன வசதிகளுடன் கூடிய புதிய உள்நாட்டு மற்றும் பன்னாட்டு முனையங்கள் செயல்படுகின்றன.
அங்கு கடந்த 2 ஆண்டுகளில் இதுவரை 9 முறை மேற்கூரை இடிந்து விழுந்தது.

உடைந்து விழும் கண்ணாடிகள்:
மேலும், 8 முறை கண்ணாடி கதவுகளும், தடுப்பு கண்ணாடிகளும், 4 முறை சுவற்றில் பதிக்கப்பட்ட கிரானைட் கற்களும் உடைந்து விழுந்துவிட்டன.

உயிர்சேதம் எதுவும் இல்லை:
மொத்தமாக, 29 முறை அங்கு அமைக்கப்பட்டுள்ள கண்ணாடிகள் உடைந்து விழுந்துள்ளன.இந்த சம்பவம் நிகழ்ந்த போது பயணிகளோ, ஊழியர்களோ இல்லாததால் எந்தவித உயிர்சேதமும் ஏற்படவில்லை.

மீண்டும் உடைந்த கண்ணாடி:
இந்த நிலையில் விமான நிலையத்தில் உள்நாட்டு வருகை பகுதியில் இருந்து பன்னாட்டு விமான நிலையத்திற்கு செல்லும் அவசர கால நுழைவு வாயிலின் கண்ணாடி கதவின் ஒரு பகுதி நேற்று காலை 10 மணி அளவில் உடைந்து விழுந்தது.

போலீஸ்காரர் படுகாயம்:
7 அடி உயரமும் 4 அடி அகலமும் கொண்ட கண்ணாடி கதவு உடைந்து விழுந்ததில் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த மத்திய தொழிற்படை போலீஸ்காரர் அன்வர்பாஷா என்பவர் படுகாயம் அடைந்தார்.

மருத்துவமனையில் சிகிச்சை:
உடனே அவரை விமான நிலைய ஊழியர்களும், பாதுகாப்பு பணியில் இருந்தவர்களும் மீட்டு விமான நிலையத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

அதிகாரிகள் விசாரணை:
இது குறித்து தகவல் அறிந்ததும் விமான நிலைய அதிகாரிகள் வந்து உடைந்த கண்ணாடி பகுதிகளை அகற்றினார்கள். மேலும், இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடரும் விபத்துகள்:
விமான நிலையத்தில் 30 ஆவது முறையாக நடைபெற்ற அசம்பாவித சம்பவம் பெரும் பரபரப்பை எற்படுத்தியது. விமான நிலையத்தில் கண்ணாடி கதவுகள் அடிக்கடி விழும் சம்பவங்கள் தொடர்வதாக பயணிகள் தெரிவித்தனர்.
-
சென்னையின் மெகா ப்ராஜெக்ட் இதுதான்! மதுரவாயல் டூ துறைமுகம்.. பறக்கும் சாலையில் காத்திருந்த சர்ப்ரைஸ் -
சென்னை மாநகர பஸ் பயணிகளுக்கு குட் நியூஸ்! கேஷ்பேக் ஆஃபரில் டிக்கெட்.. உடனே இதை பண்ணுங்க -
வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள்.. சென்னையில் இன்றும் மழை வெளுக்கும்.. 24 ஆம் தேதி வரை விடாது! -
விளாத்திகுளம் மாணவி கொலையில் குற்றவாளி சிக்கியது எப்படி? - தென் மண்டல ஐஜி விளக்கம்! -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
கூட்டுறவு வங்கிகள் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி குட் நியூஸ்? உங்க கடன் ரத்தாகுமா? கட்சிகள் மாஸ் பிளான் -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள்












Click it and Unblock the Notifications