குடிநீர்க் குழாய் வெடிப்பு.. 2 மணி நேரம் ஸ்தம்பித்த சென்னை ஏர்போர்ட் சாலை– மக்கள் அவதி
சென்னை: சென்னை மீனம்பாக்கம் விமான நிலையமருகே அமைந்துள்ள சாலையில் இன்று காலை இரண்டாவது நாளாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளானார்கள்.
நேற்று, காலையில், திடீரென்று பெய்த கோடை மழையால் சாலைகளில் அங்கங்கே அமைந்துள்ள குண்டு, குழிகளில் தண்ணீர் தேங்கியிருந்தது. அதனாலும், மெட்ரோ ரயில் வேலை நடைபெறுவதாலும் குரோம்பேட்டை, பல்லாவரம், மீனம்பாக்கம் சாலையில் கடும் வாகனப் போக்குவரத்து ஏற்பட்டது.

இந்நிலையில் இன்று இரண்டாவது நாளாக காலை வேளையில் 2 மணி நேரமாக கடும் வாகன நெருக்கடி ஏற்பட்டது. விமான நிலையமருகே அமைந்துள்ள குடிநீர்க் குழாய் ஒன்று உடைந்து தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் அவதியுற்றனர்.
கிட்டதட்ட 2 மணி நேரம் கழித்தே சிறிது, சிறிதாக வாகனங்கள் நகரத் தொடங்கின. காலையில் பணியிடத்திற்கு செல்லும் பொதுமக்கள் இந்த திடீர் வாகன ஸ்தம்பிப்பால் பெருமளவில் பாதிக்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications