சென்னை விமான நிலையத்தில் குறைந்த மின் அழுத்தம் – பயணிகள் அவதி
சென்னை: சென்னை விமான நிலையத்தில் திடீரென்று ஏற்பட்ட மின் அழுத்த குறைப்பாட்டால் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகினர்.
சென்னை மீனம்பாக்கத்தில் அமைந்துள்ள பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து பல நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப் படுகின்றன.

மற்ற நாடுகளில் இருந்து வரும் விமானங்களும் இங்கு வந்தடைகின்றன.மேலும், இரவு நேரங்களில்தான் இங்கு விமானப் போக்குவரத்து அதிகமாக நடைபெறுகின்றது.
இந்நிலையில் நேற்று இரவு 11 மணிக்கு அங்கு திடீரென்று குறைந்த அழுத்த மின்சார பிரச்சனை ஏற்பட்டது.இதனால் விளக்குகள் மந்தமாகவே எரிந்தன.ஜெனரேட்டர் உபயோகப் படுத்தியும் மின்சார பிரச்சனை சீராகவில்லை.
குறைந்த மின் அழுத்த வினியோகம் அதிகாலை வரை இருந்ததால் பயணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளானார்கள். லிப்ட், கன்வேயர் பெல்ட் எதுவும் இயங்கவில்லை.இதனால் பொருட்களை விமான நிலைய ஊழியர்கள் டிராலிகளில் எடுத்துச் சென்றனர்.
விமானப் புறப்பாடும் இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டது.பல விமானங்கள் மிகவும் தாமதமாக கிளம்பின.சரியான நேரத்தில் விமானங்கள் கிளம்ப இயலாததால் பயணிகள் கொட்டக் கொட்ட விழித்திருந்தனர்.
சர்வதேச அளவிற்கு விமான நிலையம் தரம் உயர்த்தப்படும் போது இது போன்ற இடையூறுகளையும் களைந்தால்தான் உண்மையான அங்கீகாரம் கிடைக்கும்.












Click it and Unblock the Notifications